பொள்ளாச்சி, ஜன.22- தில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப் பில் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களின் அலங்கார ஊர்தியை புறக்கணித்த ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து அனைத்து கட்சி கூட்டியக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தில்லியில் நடைபெற உள்ள இந்திய குடியரசு தினவிழா அணி வகுப்பில் தமிழ்நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்கள் வ.உ.சிதம்பர னார், பாரதியார், மருது சகோதரர் கள், வேலு நாச்சியார் பங்களிப்பை விளக்கும் அலங்கார ஊர்தி தயார் செய்யப்பட்டது. இந்த அலங்கார ஊர்தியை ஒன்றிய பாஜக அரசு அமைத்த 10 பேர் கொண்ட நிராகரித் தது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர் திகளும் நிராகரிப்பட்டது. இந்நிலையில், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அலங்கார ஊர்திகளை புறக்கணிக்கும் ஒன் றிய பாஜக அரசைக் கண்டித்து பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு அனைத்து கட்சி கூட்டி யகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் கே.மகாலிங்கம் தலைமை வகித்தார். தந்தை பெரி யார் திராவிடர் கழக மாநில வெளி யீட்டு செயலாளர் இரா.மனோகரன் ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து உரையாற்றினார். இதில், விடுதலை சிறுத்தை கள் கட்சி கோவை தெற்கு மாவட்ட செயலாளர் ச.பிரபு, தமுமுக மாவட்ட செயலாளர் கபூர், மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் முஸ்தபா, ராஜா ஜெமீசா, ஆதித்தமிழர் பேரவை பொறுப்பாளர் கோபால், தந்தை பெரியார் திராவிடர் கழக நகர செயலாளர் பழ.அசோக், விவசாய தொழிலாளர் சங்க தாலுகா தலை வர் ஸ்டாலின் பழனிச்சாமி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.