ஈரோடு, பிப்.28- சிஐடியு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் காசிபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிரந்தர தன்மை உள்ள அரசு போக்குவரத்து கழகத் தில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நியமிப் பதை கண்டித்தும், உடனடியாக அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு, காசிபாளையம் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய சங்க உதவிச்செயலாளர் ஜி.ரவி தலைமை ஏற்றார். சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.ஜான்சன் கென்னடி சிறப்புரையாற்றினார். இறுதியாக துணை பொதுச் செயலாளர் இளங்கோ நன்றி கூறினார்.