நூறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு நான்கு மாதமாக ஊதியம் வழங்காத ஒன்றிய மோடி அரசை கண்டித்து, கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியதிற்கு உட்பட்ட பல்வேறு பகுதியில், தீபாவளி தினத்தன்று விவசாய தொழிலாளர்கள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், விவசாய தொழிலாளர் சங்கம் கோவை மாவட்ட துணைத் தலைவர் ஆர். செல்வராஜ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.