districts

img

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக்.10- 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகபட்சம் 100 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு மட்டுமே அனுமதி என்று ஒன்றிய அர சின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ  கவுன்சில் ஆணை பிறப் பித்திருப்பதை கண்டித்து திராவிடர் கழகத்தினர் திருப்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திங்களன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட் டத் தலைவர் யாழ்.ஆறுச்சாமி தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் ப.குமரவேல் வரவேற்றார். ஒன்றிய அரசு மக்களின் வளர்ச்சிக்காக உள்ளதா அல்லது வீழ்ச்சி ஏற்படுத்துவதற்காகவா உள்ளிட்ட கண்டன முழக்கங்கள் எழுப்பட்டது.  இதில் தி.க. தலைமைக் கழகப் பேச்சாளர் புலியகுளம் வீரமணி, மாவட்ட தி.க. காப்பாளர் ஆசிரியர் அ.ராமசாமி, தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில அமைப்பாளர் இல.அங்ககுமார் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். இதில் தி.க அமைப்பைச் சேர்ந்தோர் பங்கேற்ற னர்.