சேலம், டிச.26– சேலம் ஶ்ரீராமலிங்க வள்ள லார் மேல்நிலைப்பள்ளியை மூடும் நடவடிக்கையை கண்டித்து, மாணவர்கள், பெற்றோர்கள் பேரணியாக சென்று பள்ளி முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் பழைய சூரமங்க லம் பகுதியில் 65 ஆண்டுக ளாக ஸ்ரீராமலிங்க வள்ளலார் மேல்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இதில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளியாகவும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை சுயநிதி பள்ளியாகவும் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 1800 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளி உரிமையாளர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஏற்கனவே விளை யாட்டு மைதானம் விற்பனை செய்யப்பட் டது. இதனிடையே பள்ளியை மூடி, கட்டி டத்தையும் விற்பனை செய்து, பங்கு தொகையை பிரித்துக்கொள்ள முடிவு செய் துள்ளனர். இந்த தகவல் வெளியானதை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் 100க் கும் மேற்பட்டோர் அண்மையில் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அம்பேத்கர் மக்கள் கட்சி மாநி லத் தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை தலை மையில் பள்ளியை மூடும் நடவடிக்கையை கண்டித்து கண்டனப் பேரணி நடைபெற் றது. இதில் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், பல்வேறு அமைப்புக ளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று, சேலம் புது ரோடு பகுதியில் இருந்து பதாகை களை ஏந்தியவாறு பேரணியாக சென்று, பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு, அதே இடத்தில் பள்ளி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி னர்.