திருப்பூர், டிச.30 - புதுக்கோட்டை மாவட்டம் இடையூர் கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத் தும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததை கண்டித்து, திருப்பூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ச.நந்தகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செ.முத்து கண்ணன், சிஐடியூ மாவட்ட துணை தலைவர் பி.பாலன், அனைத்திந்திய மாதர் சங்கம் மாவட்ட செயலாளர் கு. சரஸ்வதி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எ.பஞ்சலிங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.அருள், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் தௌ.சம்சீர் அஹமது, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சி.கே.கனகராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங் கம் மாவட்ட தலைவர் பி.ஆர்.கணேசன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் பி.ஜெயபால், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி இ.பி. ஜெயகிருஷ்ணன் உட்பட்ட திரளா னோர் பங்கேற்றனர்.