சேலம், அக்.20- பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதலை கண்டித்து பல் வேறு அமைப்புகள் சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாலஸ்தீனம் நாட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகி றது. பயங்கரவாத தாக்குதலாக இது நடை பெற்று வருகிறது. இஸ்ரேல் பாலஸ்தீனத் தின் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். கைப்பற்றியுள்ள பகுதிகளில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும். ஐநா சபை பாலஸ்தீனத்திற்கு நீதி வழங்க வேண்டும். மோடி அரசு நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள பாலஸ் தீனத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சேலம் கோட்டை மைதானத் தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்திற்கு அமைப்பின் ஒருங்கிணைப்பா ளர் எம்.சேது மாதவன் தலைமை வகித்தார். இதில் சிபிஎம் வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன் குமார், விசிக மாநகர் மாவட்டச் செயலாளர் காஜா மைதீன், மனிதநேய மக் கள் கட்சி நிர்வாகி பாபு, இந்திய முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் மூசா, முஸ்லிம் முன் னேற்ற கழகம் சார்பில் சேவகன் இப்ராஹிம் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். ஈரோடு இதேபோன்று இஸ்ரேல் அரசை கண் டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஈரோடு, சூரம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் மாவட்ட உதவித்தலைவர் அன்பு ஜனாதிபதி தலைமை வகித்தார். இதில் சிறு பான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலை வர் இஸாரத்தலி, மாவட்டச் செயலாளர் ப. மாரிமுத்து, வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் வி.ஏ.விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி இஸ்ரேலின் மனிதபிமானமற்ற தாக்கு தலை கண்டித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஏ.ஜெயா, செயலாளர் ஆர்.மல்லிகா, துணைச்செயலாளர் தனலட்சுமி, துணைத் தலைவர் கே.பூபதி, வாலிபர் சங்க மாவட் டச் செயலாளர் எம்.அருள்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை இதேபோன்று கோவை மாவட்டம், மேட் டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு நிர் வாகி மானசே சாமுவேல் தலைமை வகித் தார். இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி கண்டன உரையாற்றி னார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலூக்காச் செயலாளர் கனகராஜ், மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, சிஐ டியு நிர்வாகிகள் பாஷா சம்சுதீன், அப்துல் ரஹீம் உட்பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் பூங்கா சாலையில் சிஐடியு, மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் சிவராஜ் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் நா.வேலு சாமி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சர வணன், மாவட்டத் தலைவர் தங்கராஜ் உட்பட திரளானோர் கலந்து கொண்டு, பாலஸ்தீனத் திற்கு ஆதரவு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.