districts

img

டிஜிட்டல் கிராப் சர்வே முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம், ஜன.6- டிஜிட்டல் கிராப் சர்வே முறையை கண்டித்து ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த் துறையில் டிஜிட் டல் கிராப் சர்வே (Digital Crop Survey) முறை புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டு, அதனை நடைமுறைப் படுத்தி வருகின்றனர். இதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கான பருவம் நிறைவு பெறாத மற்றும் விளிம்புகை செய்யப்படாத கிராம நிர்வாக அலுவலர்களை வைத்து தொடங்க வேண்டும் என வும், மறுத்தால் ஒழுங்கு நடவ டிக்கை எடுக்கப்படும் என எச்ச ரிக்கை விடுப்பதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து தமிழ்நாடு முழு வதும் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். அதன்ஒருபகுதியாக சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது, டிஜிட்டல் கிராப் சர்வே முறையால்  வேலைப்பளு அதிகரிப்பதோடு, கால விரையமும் ஏற்படுகிறது. இத னால் மற்ற பணிகளில் ஈடுபடுத்த முடியாத சூழல் நிலவும் நிலையில், இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களை விரட்டும் வருவாய் நிர்வாக ஆணையரின் செயலை கண்டித்தும் முழக்கங்களை எழுப் பினர். இதேபோன்று ஓமலூர் வட் டாட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவ லர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இதில் பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு வட்டாட்சியர் அலுவல கம் கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்புப்பட்டை அணிந்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப் பாட்டத்திற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்டப் பொருளாளர் தினேஷ் குமார் தலைமை வகித்தார். இதில் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.