நாமக்கல், மார்ச் 14- இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றியமைப்போம் எனக்கூறிய பாஜக எம்.பி.,யை கண்டித்து காங்கிரஸ் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் நாடா ளுமன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் ஹெக்டே ஒரு நிகழ்வில் பேசும்பொழுது, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்தால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றியமைப்போம். புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவோம் எனக்கூறியுள்ளார். இதனை கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி பிரிவு சார்பில், நாமக் கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் கிழக்கு மாவட்டத் தலை வர் பொன்முடி தலைமை வகித்தார். இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி இதேபோன்று, தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, காங்கிரஸ் கட்சி எஸ்சி/எஸ்டி பிரிவின் மாவட்டத் தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் வீரமுனிராஜ், எஸ்சி பிரிவு மாநில பொதுச் செயலாளர் ராமசுந்திரம், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் வழக் கறிஞர் மோகன், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலை வர் காளியம்மாள், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தீபன் குமார், எஸ்சி/எஸ்டி பரிவு மாவட்ட துணைத்தலைவர் கலைச்செல்வன், மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்வாணன், மாவட்டப் பொருளாளர் மாதேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.