districts

img

கார்ப்பரேட்டுகளுக்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கை

கோவை, அக்.15- கார்ப்பரேட்டுகளுக்காக பண மதிப்பிழப்பு நடவடிக்கை என கனரா வங்கி ஊழியர் சங்க அகில இந்திய பொதுச்செயலாளர் சனில் பாபு தெரிவித்துள்ளார்.   கனரா வங்கி ஊழியர் சங்க மாநிலக்குழு கூட்டம் கோவை தாமஸ் கிளப்பில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கனரா வங்கி ஊழியர் சங்க அகில இந்திய பொதுச்செயலாளரும், அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் கேரள மாநில பொதுச்செயலாளருமான (BEFI) சனில் பாபு, தீக்கதிருக்கு அளித்த  பேட்டியில்,  சமீபத்தில் ரூ.2 ஆயிரம்  நோட்டு செல்லாது என ரிசர்வ்  வங்கி அறிவித்தது. அதன் உள் நோக்கம், கடந்த காலங்களில் வங்கிகள் கொடுத்த கடன்களில் 85 சதவிகிதம் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே வழங்கியது. ஆனால், அவர்கள் வேண்டுமென்றே திருப்பி செலுத்துவதில்லை. வெறும் சிலருக்கு மட்டுமே இப் பெரும் தொகையினை வங்கிகள்  வழங்கின. கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கிய ரூ.15 லட்சம் கோடியை,  15 கோடி பேருக்கு தலா ரூ.1 லட்சம் கடனாக வழங்கியிருக்கலாம். இதன் மூலம் மக்களிடம் பணப் புழக்கமும், வாங்கும் சக்தியும் அதி கரித்திருக்கும். அது நாட்டின் வளர்ச்சிக்கும் உதவியிருக்கும். ஒன்றிய அரசும், ரிசர்வ் வங்கி யும் அப்பட்டமாக கார்ப்பரேட்டு களுக்கு சேவை செய்வதே நோக்க மாக கொண்டுள்ளன. இது போன்ற  காரணங்களால் வராக்கடன் பெருகி  வருகிறது. அதனை சரி செய்வதற் காகதான்  மீண்டும் கார்ப்பரேட்டு களுக்கு கடன் வழங்கும் நோக்கத் துடனேயே இரண்டாயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிப்பை  வெளியிட்டார்கள். இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்த போதே தவறு என கூறினோம். தற்போதும் வங்கிகளிடம் கார்ப் பரேட்டுகளுக்கு வழங்க பணம் இல்லாத நிலையிலேயே, இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் வங்கிகளில் இரண் டாயிரம் ரூபாய் நோட்டுகள் டெபா சிட் ஆகும்.  வங்கிகளில் 80 சதவிகித சேமிப் புகள் விவசாயிகள், தொழிலா ளர்கள் மற்றும் வெளிநாட்டில் பணியில் உள்ளோர் மூலமே கிடைக் கிறது. சமீப காலமாக பொது  மக்களிடம் சேமிப்பு குறைந் துள்ளது. அதற்கு, ஒன்றிய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் தவறான முடிவுகளே காரணமாகும். கூட் டுறவு வங்கிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த கூட்டுறவு வங்கிகளை ஒன்றிய அரசு தமது கட்டுபாட்டில் கொண்டு  வர தீவிரம் காட்டி வருகிறது.

கூட்டு றவு வங்கிகள் மூலமே, மாநில அரசின் உதவித்தொகைகள், கடன் கள், மானியங்கள் என பெரும் பகுதி  மக்கள் பலனடைந்து வருகின் றனர்.  எளிய மக்களின் சேமிப்பு கணக் கில் குறைந்தபட்ச கையிருப்பு  இல்லையென்றும், சேவைக் கட்டணம், பரிமாற்ற கட்டணம் என  பல்வேறு வகைகளில் வங்கிகள்  பணத்தை பறித்து வராக்கடன் களால் ஏற்படும் பற்றாக்குறை யினை சரிகட்டுகிறது. வங்கிகள்  எளிய மக்களுக்கு கடன்கள் வழங்க வேண்டும். இது சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். இத னால் சாமானியர்கள் பயனடை வர்கள். சட்டபடியான சம்பளம், சலுகை ஆகியவற்றின் மூலம்  எளிய மக்களிடம் பணப்புழக்கமும்,  வாங்கும் சக்தியையும் அதிக ரிக்கும். அதனால் வங்கிகளும் பயன் அடையும். ஆனால், ஒன்றிய  அரசின் நோக்கம் இதற்கு எதிரான தாக உள்ளது. ரிசர்வ் வங்கி,  சாமானிய மக்களின் நலனுக்கு எதி ராக இருக்கிறது. ஆனால் வரலாற் றில் எளிய மக்களே மாற்றத்தை கொண்டுவந்துள்ளனர், என்றார்.   முன்னதாக, கனரா வங்கி ஊழியர் சங்க மாநிலக்குழு கூட் டத்திற்கு மத்தியக்குழு உறுப்பினர் என்.சுப்ரமணியன தலைமை ஏற் றார். மாநிலச் செயலாளர் அஜ்ஜி  மகேந்திரன் வரவேற்றார்.  பிஇஎப்ஐ  தமிழ் மாநில உதவித்தலைவர்  என்.ராஜகோபால் துவக்கவுரை யாற்றினார். கனரா வங்கி ஊழியர் சங்க அகில இந்திய பொதுச் செயலாளர்  சனில்பாபு சிறப்புரை யாற்றினார். மாநில உதவித் தலைவர் எஸ்.ஏ.ராஜேந்திரன், இந்திய வங்கி ஊழியர் சங்க  கோவை மாவட்ட பொதுச்செய லாளர் ஆர்.மகேஸ்வரன், கனரா வங்கி ஊழியர் சங்க மாநில உதவித்தலைவர் எஸ்.சிவலிங்கம்,  பொருளாளர் பி.டி.ரங்கராஜன்  மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் கள், ஊழியர்கள் கலந்து கொண் டனர்.