தருமபுரி, டிச.22- தருமபுரி மாவட்டத்தில் பழுதடைந்த 480 பள்ளி கட்டிடங் கள் இடித்து அகற்றப்பட்டன. தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயன் பாட்டில் இல்லாத பழுதடைந்த இடிக்கப்பட வேண்டிய பழைய கட்டிடங்கள் குறித்து பள்ளி கல்வித்துறை மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடந்த டிச.17, 18 ஆகிய தேதி களில் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அப்போது, மாவட்டத் தில் பயன்பாட்டில் இல்லாத பழுதடைந்த பழைய கட்டிடங் கள் கண்டறியப்பட்டன. இதன்படி 98 பழுதடைந்த பள்ளி கட்டி டங்கள், 49 சத்துணவு மைய கட்டிடங்கள் இடித்து அகற்றப் பட்டன. மேலும், 95 சிறு குடிநீர் தொட்டிகள், 202 கழிப்பறை கள், 42 ஆய்க்கூட கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. இதன்படி, மாவட்டத்தில் மொத்தம் 480 கட்டிடங்கள் அடியோடு இடிக் கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்ப டையில், பழுதடைந்த 480 பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற் றப்பட்டுள்ளன. இதேபோல், சீரமைக்கப்பட வேண்டிய பள்ளி கட்டிடங்கள், பள்ளி கழிப்பறைகள் உள்ளிட்ட பல் வேறு கட்டிடங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள் ளாட்சித்துறை, குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள் வாயிலாக பராமரிப்பு மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இந்த பணிகள் குறித்த காலத்தில் முடிக்க ஏதுவாக அரசு அலுவலர்கள் கொண்ட குழு அமைத்து, அனைத்து பள்ளிகளிலும் உள்ள கட்டிடங்களின் உறுதித் தன்மையை சரிபார்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.