திருப்பூர், ஏப்.23 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட இளம்பெண்கள் மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. இந்த மாநாட்டு கொடியை மாவட்டக் குழு உறுப்பினர் பவித்ரா ஏற்றி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் சௌந்தர்யா தலை மையில் நடைபெற்ற மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட தலைவர் அருள் பேசினார். அதை தொடர்ந்து நடைபெற்ற விவா தத்திற்கு மாவட்ட செயலாளர் செ.மணி கண்டன் தொகுப்புரை வழங்கினார். இதையடுத்து நடனம் - அயலி பட விமர்ச னங்களை தொடர்ந்து மாநாட்டை விளக்கி மாநில இளம்பெண்கள் கன்வீனர் பாரதி பேசினார். தொடர்ந்து மாவட்ட கன்வீன ராக மு.சௌந்தர்யா, மாவட்ட இணை கன்வீனர்களாக பவித்ரா, தீபா, சுதா உள்ளிட் டோர் தேர்வு செய்யப்பட்டனர். வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் நிறைவுரையாற்றினார்.