districts

img

ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை விரிவுபடுத்த கோரிக்கை

உடுமலை, ஜன.7-  முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் சாலைகள் இருக்கும் தளி  பேரூராட்சியில் போக்குவரத்து நெரிச லைத் தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை விரிவு படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள் ளது. தளி பேரூராட்சியில் ஆயிரக்கணக் கான சுற்றுலாப் பயணிகள் செல்லும் பஞ்ச லிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்திமலை அணை, திரைப்பட படப்பிடிப்பு தளங்கள் உட்பட  பொதுப்பணித்துறை அலுவலகம், உடு மலை ஒன்றிய கிராமங்களுக்குக் குடிநீர்  விநியோகம் செய்யும் தண்ணீர் தொட் டிகள், மீன் பண்ணை என அரசின் முக் கிய அலுவலகங்கள் உள்ளன. மேலும்  தளி பேரூராட்சியின்  வழியாக தான்  பழனி முருகன் கோவில், ஆழியாறு  அணை, வால்பாறை, ஆனைமலை, டாப்சிலிப் மற்றும் அண்டை மாநில மான கேரளா செல்ல முடியும். இப்பகுதி யில் வாகனங்கள் அதிமாக செல்லும் இப்பகுதியில் பேரூராட்சியின் சாலை கள்  குறுகலாக உள்ளதால் போக்குவ ரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படு கிறது. இதைத் தவிர்க்கும் வகையில் சாலைகளை அகலப்படுத்த வேண்டும்  என்று கோரிக்கை வைத்து போராட்டங் கள் நடைபெற்றுள்ளது. இதையடுத்து,  அன்றைய உடுமலை வருவாய் கோட் டாட்சியர் தலைமையில் 2017 ஆம்  ஆண்டு சாலை விரிவாக்கம் செய்ய அள வீடு செய்யப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அடையாளம் காட்டும் வகையில் வரு வாய்த்துறையினர் குறியீடுகள் வைத்த னர். இந்நிலையில், அளவீடு செய்யப் பட்டு ஏழு ஆண்டுகள் ஆன நிலையில்  எந்த மாற்றமும் இல்லாமல் சாலைகள்  இன்னும் மோசம் அடைந்து காணப்படு கிறது. மேலும் போக்குவரத்து நெரிச லும் அதிகரித்துள்ளது. பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி விரைவில் தளி பேரூராட்சி சாலைகளை விரிவு படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.