districts

img

சின்னவெங்காயம் அறுவடை பணிகள் தீவிரம் நிலையான விலை வழங்க கோரிக்கை

திருப்பூர், ஏப்.7- உடுமலை பகுதியில் சின்னவெங்காயம் சாகுபடியில் அறு வடை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நிலையான விலை கிடைக்க அரசு உதவ வேண்டும் என விவசாயிகள் எதிர் பார்த்துள்ளனர். உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் கிணற்றுப் பாசனத் துக்கு இரு சீசன்களில் சின்னவெங்காயம் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. நாற்று நடவு முறையை  பின்பற்றுகின்றனர். பிற காய்கறி சாகுபடியை விட இச்சாகு படிக்கு அதிக செலவாகிறது. எனவே அறுவடையின் போது,  விலை வீழ்ச்சி ஏற்பட்டால், விவசாயிகள் கடுமையாக பாதிக் கின்றனர். இந்நிலையில் கடந்த தை பட்டத்திலும், பின்பட் டத்திலும் நடவு செய்யப்பட்ட சின்னவெங்காய சாகுபடியில்  அறுவடை பணிகள் துவங்கியுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: சின்னவெங் காய சாகுபடியில் ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிக மாக செலவாகிறது. தொழிலாளர் தட்டுப்பாடு காரணமாக இந் தாண்டு அறுவடை செலவும் பல மடங்கு அதிக ரித்து விட்டது. நடப்பு சீசனில் போதிய மழை இல்லாததால் பயிரின் வளர்ச்சி  பாதித்தது. தற்போது அறுவடை பணிகள் துவங்கியுள்ள  நிலையில், கிலோ 20, 30 ரூபாய்க்கு நேரடியாக கொள்முதல்  செய்கின்றனர். இந்த விலை கட்டுப்படியாகாது. எனவே அறு வடை சீசனில் ஏற்றுமதி வாய்ப்புகள் கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.