தாராபுரம், ஜூன் 21 - தாராபுரத்தில் நடந்த தென்னை விவ சாய மேம்பாட்டு குழு ஆலோசனைக் கூட்டத்தில், நியாயவிலை கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனையை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாராபுரம் பேருந்து நிலையம் அரு கில் உள்ள ஜோதி மகாலில் தென்னை விவசாய மேம்பாட்டு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சங்க நிர்வாகி தமி ழரசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வெள்ளைச்சாமி, காளி தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்த னர். தென்னை விவசாய மேம்பாட்டு குழு மாநிலத் தலைவர் பிரபுராஜா கூட் டத்தில் பேசுகையில், கொங்கு மண்ட லத்தில் தென்னை விவசாயம் 50 சதவிகி தத்திற்கு மேல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது தேங்காய் மற்றும் கொப்பரை விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. குறைந்தபட்ச கொப் பரை கொள்முதல் ஆதார விலையாக கிலோ ரூ. 108.60 பைசாவாக அறிவிக்கப் பட்டுள்ளது. அந்த விலையை விட மார்க் கெட் விலை தற்போது கிலோ 72 ரூபாய் 60 பைசாவாக உள்ளது. கிலோவுக்கு சுமார் 35 ரூபாய் விலை குறைத்து கொள் முதல் செய்வதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. குறைந்த பட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக அங்கீகரித்து அந்த விலைக்கு கீழே கொள்முதல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு முழுவதும் நியாயவிலை கடைகளில் தேங்காய் எண்ணெய் விற் பனையை விரிவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார். முடிவில் அலங்கியம் அமரா வதி பாசன விவசாயிகள் சங்க தலை வர் ஈஸ்வரமூர்த்தி நன்றி கூறினார்.