districts

img

சென்னிமலைபாளையம் புதுக்காலனியில் குடிநீர் விநியோகத்தில் பாரபட்சத்தை போக்க கோரிக்கை

திருப்பூர், செப்.4- ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம்  செங்கப்பள்ளி ஊராட்சி, சென்னி மலைபாளையம் புதுக்காலனியில் நில வும் கடுமையான குடிநீர் தட்டுப் பாட்டை போக்கிடக்கோரி அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந் திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற் றும் ஊர் பொதுமக்கள் சார்பில் திங்க ளன்று ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி  அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக் கப்பட்டது.  இம்மனுவில் கூறியிருப்பதா வது, சென்னிமலைபாளையம் புதுக் காலனியில் 200க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றனர். இவர் கள் அனைவரும் விவசாய கூலித்  தொழிலாளர்களாகவும், 100 நாள்  வேலைத் திட்ட பணியாளர்களாக வும், பனியன் தொழிலாளர்களாக வும், சுமை தூக்கும் தொழிலாளர் களாகவும் வேலைக்கு சென்று  பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந் நிலையில் ஆற்று குடிநீர் விநியோகம்  செய்து 10 நாட்களுக்கு மேல் ஆகின் றது. இதனால் கடுமையான குடிநீர்  தட்டுப்பாட்டிற்கு இப்பகுதி மக்கள்  ஆளாகி உள்ளனர். குடிதண்ணீர் பிரச் சினையால் வேலைக்கு செல்ல முடி யாமல் வருமானத்தை இழக்கும் நிலையும் ஏற்படுகிறது. ஆற்று குடி நீரும் வருவதில்லை. உள்ளூர் போர் வெல் தண்ணீரும் சப்ளை இல்லை  என்ற நிலையில் மிகுந்த சிரமத்திற்கு  உள்ளாகின்றனர். அப்படியே தண் ணீர் எப்போதாவது வந்தாலும் இரவு  11 மணிக்கு மேல் விநியோகிக்கப்படு கிறது.  

செங்கப்பள்ளி ஊராட்சியில் பல் வேறு குடிநீர் திட்டங்கள் இருந்தும் சென்னிமலைபாளையம் புதுக் கால னிக்கு குடிநீர் விநியோகத்தில் மிகுந்த பாரபட்சம் காட்டப்படுகிறது. 800க்கும் மேற்பட்ட மக்கள் வசிக் கின்ற நிலைமையை கவனத்தில் எடுத்துக் கொண்டு ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும், செங் கப்பள்ளி ஊராட்சி நிர்வாகமும், குடி நீர் வடிகால் வாரியமும் தினசரி ஆற் றுக் குடிநீர் விநியோகம் செய்வ தற்கும் காலை, மாலை நேரங்களில் சரியான நேரத்தில் குடிநீர் விநியோ கிக்கவும், போர்வெல் குடிநீர் போது மான அளவு வழங்கவும், உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்.  வட்டார வளர்ச்சி அலுவலரும் உடனடியாக ஆய்வு செய்து நடவ டிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஒரு வார காலத்திற்குள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் செங்கப் பள்ளி ஊராட்சிமன்ற அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப் பட்டது. இந்நிகழ்வில் ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கு. சரஸ்வதி, தாலுக்கா துணை தலைவர்  லட்சுமி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தாலுக்கா தலைவர் ஆர்.மணியன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தாலுக்கா  செயலாளர் பாலமுரளி, தாலுக்கா பொருளாளர் விக்னேஷ், கிளை நிர் வாகி கோவிந்தராஜ், சக்திவேல், மாதர் சங்க கமிட்டி உறுப்பினர் பிரி யங்கா,  உள்ளிட்டு  பொதுமக்களும் திரளானோர் கலந்து கொண்டனர்.