districts

குடியிருப்பு பகுதியில் கல் குவாரிகளை தடை செய்ய கோரிக்கை

திருப்பூர், மே 16- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம்,  மாவட்ட ஆட்சியர் சு.வினீத் தலைமையில் திங்கள்கிழமை நடந்தது. இதில் பொது மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கான மனுக்கள் அளித்தனர்.  காங்கயம் மறவபாளையம் ஊராட்சி செம்மண்குழிபாளையம் வார்டு உறுப்பினர் திருமூர்த்தி தலைமையில் கிராம மக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, எங்கள் குடியிருப்புக்கு அருகில், இருவர் கல்குவாரிகள் அமைத்துள்ளனர். இதற் கான ஆட்சேபனையை, உரிமம் வழங்கும் முன்பே மறவாபாளையம் கிராம நிர்வாக அலுவலரிடம் அளித்திருந்தோம். இந்த நிலையில் தற்போது புதியதாக கல்குவாரி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே இயங்கி வரும் கல்குவாரிகளால் எங்கள் குடியிருப்புகளில் கற்கள் வந்து விழுகின்றன. பெரும் துன்பத்துக்கு ஆளாகி றோம். கல் உடைப்பதால் ஏற்படும் கடும் புகை, தூசியால் எங்களின் தொழில் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் முற்றிலும் பாதிக் கப்பட்டுள்ளன. எங்கள் குடியிருப்புக்கும், கல்குவாரிக்கும் இடையே 67 மீட்டர் இடை வெளி மட்டுமே உள்ளது. இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். மிக அருகில் கல்குவாரி செயல்படுவதால், உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையை  சந்தித்துள்ளோம். ஆகவே வருவாய்த் துறை அதிகாரிகள் அளித்துள்ள அறிக்கை யின் அடிப்படையில் கல்குவாரிகளை தடை  செய்ய வேண்டும். அதேபோல் அதன் உரி மத்தை ரத்து செய்ய வேண்டும். எங்கள் பகு தியில் எந்தவொரு குவாரி திட்டத்துக்கான அனுமதியையும் வழங்கக்கூடாது. கடந்த கிராம சபை கூட்டத்திலும், கல்குவாரிகள் இயங்க தடை விதிக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

அலகுமலை ஊராட்சி தலைவர் ஆர். தூயமணி அளித்த மனுவில், எங்கள்  ஊராட்சி கோவில்பாளையம் ஏடி காலனி மக்களுக்கு சொந்தமான மயானத்தில்,  சுற்றுச்சுவர் எழுப்பி எரிமேடை அமைத்து தர வேண்டும். 300 குடும்பங்கள் வசித்து வரு வதால், எங்கள் பகுதியில் யாரேனும் இறக்க நேரிட்டால், சடலத்தை எடுத்து செல்லும் பாதை இருட்டாக உள்ளது. ஆகவே மயான பாதைக்கு தெருவிளக்கு வசதியையும் ஏற் படுத்தித் தர வேண்டும். தற்போது இந்த வசதிகள் இல்லாததால், பெரும் சிரமத் துக்கு ஆளாகிறோம் என தெரிவித்துள் ளார்.  மடத்துக்குளம் ஏ.கே.புத்தூர் அருள் புரம் லே-அவுட் குடியிருப்போர் மனை இட உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் அளித்த மனுவில், நகர ஊரமைப்புத்துறை மற்றும் பேரூராட்சியில் முழு அங்கீகாரம் பெற்ற மேற்கண்ட பகுதியில் இடம் வாங்கி உள் ளோம். தற்போது தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு எங்களது இடம் சாலை அமைக்க கையகப்படுத்தப்பட்டு, அதற் குரிய இழப்பீட்டுத்தொகை வழங்க உடு மலை வட்டாட்சியர் (நிலம் எடுப்பு) பரிந் துரை செய்யப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட  வருவாய் அலுவலருக்கு (நிலம்  எடுப்பு)  அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுக ளாக நிலம் கையகப்படுத்தியதற்கான இழப் பீட்டுத்தொகையை கேட்டு, திருப்பூர்  மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) பல முறை நேரிலும், பதிவு அஞ்சல் மூலம் தொடர்ந்து மனு செய்து இழப்பீட்டுத் தொகை கோருகிறோம். 

எங்களது மனுக்கள் மீது இன்றுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மனை வக்ஃபுக்கு சொந்தமானது என  கூறி வருகின்றனர். ஆனால் கடந்த 70 ஆண்டு களாக கிராம ஆவணங்களிலும், வருவாய்த் துறை ஆவணங்களிலும் எங்களின் பெயர் பதிவு செய்யப்பட்டு, கணினி சிட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு, எங்க ளுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ள னர். பல்லடத்தை அடுத்துள்ள வே.கள்ளிபா ளையம்  பகுதியில் 60க்கும் மேற்பட்ட  தாழ்த்தப்பட்ட அருந்ததியின குடும்பங்கள் மூன்று  தலைமுறைகளாக வசித்து வரு கின்றனர். இந்நிலையில் இவர்கள் வசித்து வரும் பகுதி நீர் நிலை எனவும், இப்பகுதியில் வசித்து வரும் மக்களை தீடீர் என காலி செய்யகோரி அரசு அதிகா ரிகள் நோட்டிஸ் வழங்கியுள்ளனர். மேலும் மூன்று தலைமுறைகளாக வசித்து வரும் மக்களுக்கு உரிய பட்டா வழங்கவேண்டும் என்றும், தாங்கள் வசித்து வரும் இடத்தி லேயே நத்த பட்டா வழங்க கோரியும் சம்மந் தப்பட்ட மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சி யரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தங் கள் குடியிருக்கும் இடத்திற்கு உரிய முறை யில் வரி செலுத்தி வந்துள்ளதாகவும் திடீர் என வீட்டை காலி செய்யும் நடவடிக்கை அரசு கைவிட வேண்டும் என்றும் அம்மக்கள் கண் ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள னர்.