districts

img

கூலி உயர்வு அரசாணையை நடைமுறைப்படுத்த தையல் கலைஞர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருப்பூர், அக்.11- கூட்டுறவு தையல் உறுப்பினர்களுக்கு 2015 ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் 5  சதவிகித கூலியை உயர்த்தி வழங்கும் அரசா ணையை அமல்படுத்துமாறு திருப்பூர் மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் (சிஐ டியு) நிர்வாகிகள் சமூக நலத்துறை அலுவலரி டம் கோரிக்கை மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கத்தின் செயலாளர் சி.ஈஸ்வரமூர்த்தி, தலைவர் எஸ்.வேல்முருகன், பொருளாளர் என்.கணேசன் உள்ளிட்டோர் புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக  நலத்துறை அலுவலகத்தில் கோரிக்கை மனு  அளித்தனர். இதில், 5 சதவிகித கூலி உயர்வு  அரசாணையை அமலாக்குவது, தையல் கூட் டுறவு பெண் உறுப்பினர்களிடம் பிடித்தம் செய்த சிக்கன சேமிப்பிற்கு வட்டி வழங்க  வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் பங்குத் தொகைக்கு டிவிடெண்ட் வழங்க வேண்டும். பள்ளி சீருடைகளை எடுத்துச் செல்ல பேருந் தில் லக்கேஜ் கட்டணம் வாங்குவதைக் கைவிட வேண்டும். கூட்டுறவு தையல் உறுப் பினர்களுக்கு தீபாவளி போனஸ், இலவச பள்ளி சீருடை தைக்க பயன்படுத்தும் மின்சா ரத்தை இலவசமாக வழங்க வேண்டும். தமி ழகத்தில் 79 மகளிர் தையல் கூட்டுறவு சங் கங்கள் உள்ளன. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.  பல்லடம் பகுதியில் உள்ள தையல் கூட்டுறவு சங்கத்தில் சுமார் 250 உறுப்பினர்கள் உள்ள னர். அவர்களுக்கு மேற்கண்ட கோரிக்கை களை அமலாக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். முன்னதாக இவ்வியக்கத்தில், சிஐடியு சங்க நிர்வாகிகள் பி.பாலன், ஒய்.அன்பு,  எல்லம்மாள், ஆர்.பரமசிவம், பி.ரத்தினசாமி, பி.தண்டபாணி, முருகசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.