districts

அரசின் வேட்டி, சேலை உற்பத்தி விசைத்தறி சங்க கூட்டமைப்பினர் கோரிக்கை

ஈரோடு, டிச.24- தமிழக அரசின் முதியோர் ஓய்வூதிய திட் டத்தின் கீழ் கொடுக்கப்படும் வேட்டி, சேலை  உற்பத்தி அனைத்து விசைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்க உறுப்பினர்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள் ளது.  தமிழக அரசின் சார்பில் தீபாவளி மற்றும்  பொங்கல் பண்டிகைக்கு முதியோர் ஓய்வூதி யத் திட்டத்தின் கீழ் வேட்டி, சேலைகள் உற் பத்தி செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த  ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 24 லட்சத்து  70 ஆயிரம் சேலைகளும், 9 லட்சத்து 40 ஆயி ரம் வேட்டிகளும் கொடுக்கப்படுகிறது. அதே போல் பொங்கல் பண்டிகைக்காக 24 லட்சத்து  25 ஆயிரம் சேலைகளும், 6 லட்சத்து 13 ஆயி ரத்து 420 வேட்டிகளும் வருவாய்த் துறை மூலம் தமிழக ஜவுளித்துறைக்கு ஆர்டர் கொடுக்கப்படுகிறது.  அதன்பின் கோ ஆப்  டெக்ஸ், தமிழகத்தில் உள்ள 240க்கு மேற் பட்ட விசைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங் களில் இருந்து குறிப்பிட்ட 40 விசைத்தறி கூட்டு றவு நெசவாளர்கள் சங்கம் மூலம் உற்பத்தி  செய்கிறது. இதனால், அனைத்து விசைத்தறி கூட்டுறவு சங்க உறுப்பினர்களும் உற்பத்தி  செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்படு கிறார்கள். பல கூட்டுறவு விசைத்தறி சங்க உறுப்பினர்கள் தங்கள் விசைத்தறிகளுக்கு வேலை கொடுக்க முடியாமல் நிறுத்தி வைக் கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். எனவே, இனி வரும் காலங்களில் முதி யோர் ஓய்வூதிய திட்டத்திற்கு கீழ் கொடுக் கப்படும் வேட்டி, சேலை உற்பத்திகள், அனைத்து விசைத்தறி கூட்டுறவு நெசவாளர்  சங்கங்களுக்கும் பகிர்ந்து கொடுக்க வேண் டும் என கைத்தறித்துறை அமைச்சரை, தமிழ் நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பி னர் அனுகியுள்ளதாக, அதன் அமைப்பு  செயலாளர் பா.கந்தவேல் தெரிவித்துள் ளார்.