பென்னாகரம், ஜூலை 26- வனப்பகுதியில் கால்நடைகள் மேய்க் கும் உரிமையை தடை செய்ய கூடாது என மலைவாழ் மக்கள் சங்க தருமபுரி மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங் கத்தின் தருமபுரி மாவட்ட 5 ஆவது மாநாடு பென்னகரத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ஆ. கண்ணகி தலைமை வகித்தார். சங்கத் தின் மாநில பொருளாளர் ஏ.பொன்னு சாமி மாநாட்டை துவக்கி வைத்து உரை யாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிசு பாலன், பென்னாகரம் பகுதி குழு செய லாளர் வி.ரவி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சோலை அர் ஜூனன், தர்மபுரி மாவட்ட குறும்பஸ் பழங்குடி சங்க தலைவர் டி.மாதையன், மாவட்ட குருமஸ் பழங்குடி சங்க நிர் வாகி லட்சுமணன், பென்னாகரம் ஒன் றிய தலைவர் லட்சுமி காந்தன், பால் உற் பத்தியாளர் சங்க மாவட்ட தலைவர் கே. அன்பு, மாவட்ட செயலாளர் தீர்த்தகிரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஆ.ஜீவானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் கே.என்.மல்லையன் அறிக்கை வைத்து உரையாற்றினார்.
இதில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலையாளி இருளர், குருமன்ஸ், காட்டு நாயக்கர் பழங்குடி மக்கள் அனைவ ருக்கும் சாதிச்சான்றிதழ் வழங்க வேண் டும். 2006 ஆம் ஆண்டின் வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி நிலப்பட்ட வழங்க வேண்டும். வனப் பகுதியில் கால்நடை மேய்க்கும் உரி மையை பறிக்கக்கூடாது. அனைத்து மலை கிராமம் சாலை அமைத்து பேருந்து இயக்க வேண்டும். மலைவாழ் மக்கள் தொகுப்பு வீடு கட்ட வழங்கப்படும் நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத் தின் மாநில பொதுச் செயலாளர் ஆர்.சர வணன் நிறைவுரையாற்றினார். முன்னதாக, நடைபெற்ற புதிய நிர் வாகிகள் தேர்வில் மாவட்ட தலைவராக ஏ.அம்புரோஸ், மாவட்ட செயலாளராக கே.என்.மல்லையன், மாவட்ட பொரு ளாளராக எல்.வெங்கட்ராமன் உள் ளிட்ட 23 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. மலைவாழ் மக் கள் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் ஆர்.சரவணன் நிறைவுரையாற் றினார்.