திருப்பூர், ஜூலை 30- செட்டிபாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறு கையில், இங்கு 100க்கும் மேற்பட்ட வீடு கள் உள்ளன. அடிப்படை வசதிகள் இன்றி சிரமப்பட்டு வருகிறோம். இப்ப குதி ஊராட்சியாக இருந்தபோது, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாரப்பன் பஞ்சாயத்து தலைவர் பொறுப்பில் இருந்தபோது ஏடி காலனி பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்க ளுக்கு 26 தொகுப்பு வீடுகள் கட்டித் தரப் பட்டது. தற்போது மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகு எந்த அதிகாரிக ளும் இப்பகுதிக்குள் ஆய்வு மேற்கொள் ளவில்லை. 26 வீடுகளில் 20 வீடு கள் மிகவும் மோச மான நிலையில் உள்ளன. அரசு உரிய முறையில் தொகுப்பு வீடு களை சீரமைத்து தர வேண்டும். மேலும், இப்பகு தியிலுள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால், மிக அதிக அளவில் கொசு உற்பத்தி ஆகிறது. பொதுமக்களுக்கு இதனால் அடிக்கடி நோய் தொற்று ஏற்படுகிறது. அனை வருக்கும் ஏதேனும் ஒரு அலர்ஜி உள் ளது. இப்பகுதியில் உள்ள மாநக ராட்சி கழிப்பிடம் தினசரி சுத்தம் செய்யப் படுவதில்லை. முழுமையாக பாசனம் பிடித்து காணப்படுகிறது. கழிப்பி டத்தை பயன்படுத்த உள்ளே செல்ப வர்கள் கீழே வழுக்கி விழுந்து கை, கால் உடையும் சம்பவங்கள் நடந்த வண் ணம் உள்ளன. மாநகராட்சி இப்பகுதி யில் உள்ள அடிப்படை பிரச்சனை களை சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.