districts

img

பாழடைந்த அங்கன்வாடி மையத்தை சீரமைக்க கோரிக்கை

அவிநாசி, நவ.15 - சேவூர் அருகே, பேராபத்தை விளைவிக்கும் பாழடைந்த அங்கன் வாடி மையத்தை சீரமைக்க பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  அவிநாசி வட்டம், தண்டுக்காரன் பாளையம் ஊராட்சி, ராமியம்பாளை யம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்ப சுகாதாரக் கல்வி பயின்று வருகின்றனர். இந்த  அங்காடி மையம் சுமார் 50 ஆண்டு களுக்கு முன்பு கருங்கல்லால் கட் டப்பட்ட ஓடுகளால் வேயப்பட்ட ஓர் பழமையான கட்டிடமாகும். மிகவும் பாழடைந்த மேற்படி கட்டிடமானது முறையான பராமரிப்பின்றி தற் சமயம், ஓடுகள் உடைந்தும், சுவர்கள் தரமிழந்தும் தரைகள் தளம் இடிந் தும் காணப்படுகிறது. தற்போது தொடர்ந்து மழை பெய்து, ஓடுகள் உடைந்துள்ளதால் மழை நீர் உள்ளே வழிகிறது. மழைநீர் அங்கன்வாடி மையத்தில் தேங்குவதால், குழந்தை களுக்கு சளி, காய்ச்சல்  போன்ற நோய்த் தொற்றுகள் ஏற் பட்டு விடுமோ என்ற அச்சவுணர்வில் இருக்க வேண்டியுள்ளது. இதனால் குழந்தைகள் பயில வும், ஓய்வெடுக்கவும், விளையாட வும், உட்காரவும் கூட இடமின்றியும் உள்ளனர். மேலும் 50 ஆண்டுகளாக அங்கன்வாடி மையத்தில் மின்சாரம்  இன்றி உள்ளது. இது குறித்து சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான திரு மூர்த்தி, தமிழக முதல்வரின் தனிப் பிரிவிற்கும், மாவட்ட ஆட்சியருக் கும் மனு அனுப்பியுள்ளார். இதில், குழந்தைகளின் நலன் கருதி உடன டியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழை நீர் ஒழுகும் இடத்தை சரி  செய்து தர வேண்டும். 50 ஆண்டு களாக மின் இணைப்பற்ற நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு  மின் இணைப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பபட்டுள்ளது.