நாமக்கல், மார்ச் 20- நாமக்கல் மாவட்டம், குமரமங்கலம் பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையத்தை மேம்படுத்தி தர பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம்,திருச்செங்கோடு வட்டம், 87 கவுண்டம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குமரமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள அரசு துணை சுகாதார நிலையமானது மாணிக்கம்பாளையம் அரசு மருத்துவ மனை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. சுமார் 500 சதுர அடி அளவில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் சிதிலமடைந்து பராமரிப்பு இல்லாமல் உள் ளது. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டும்போது காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை இயங்கக் கூடிய மருத்துவமனையாக செயல்பட்ட போது, இந்த பகுதி மிகவும் சிறிய கிராமம் ஆக இருந்தது. தற்போது குமரமங்க லம், போக்கமபாளையம், காந்திநகர், இந்திரா நகர், நாடார் தெரு, சக்திநாய்க்கன்பாளையம், மேட்டுப்பாளையம் பிரிவு ரோடு, மண்டக்காபாளையம் உள்ளிட்ட பகுதிகள் இணைந்து, சுமார் 10 ஆயிரம் மக்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். மக்கள் அதிகம் வசித்து வரும் இப்பகுதி யிலுள்ள துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, தின சரி மருத்துவர்கள் வருவதை உறுதி செய்திட வேண்டும். மேலும், சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்ப்பதற்கு மட்டும் செவிலியர் ஒருவர் இருக்கிறார். பொது மருத்துவம் பார்க்கக்கூடிய மருத்துவர் இல்லாததால் மக்கள் திருச் செங்கோடு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையை நாட வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், மருத்துவரை நியமித்தும், சிதல மடைந்துள்ள கட்டிடத்தை தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.