திருப்பூர், ஜூலை 14 - பத்து ஆண்டுகளுக்கு மேல் மின்வாரியத்தில் ஒப் பந்த ஊழியர்களாக பணியாற் றும் ஊழியர்களை நிரந்தரப்ப டுத்த வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளி யன்று மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதா வது, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியர்கள் பல ஆண்டுகளாக மின் உற்பத்தி, மின் பாதைகள் அமைத்தல், பராமரித்தல் மற்றும் விநியோக பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர். இந்த ஒப்பந்த தொழிலாளர் கள்தான் தமிழகத்தில் சென்னை வெள்ளம், வார்தா, தானே, ஓக்கி போன்ற புயல்கள் மற் றும் இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்பட்ட மின்தடைகளை சரி செய்து, மின்வாரியத் திற்கும், தமிழக அரசிற்கும் பெருமை சேர்த்த வர்கள் ஆவர். திமுக அரசு அமைந்தால் தேர்தல் அறிக் கையின்படி 10 ஆண்டுகளுக்கு மேல் பொதுத் துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர் களை நிரந்தரம் செய்வதாக தெரிவித்திருந் தார்கள். அந்த அடிப்படையில், மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களின் விபரங்களை மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் தமிழக முதல் வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண் டும் என கூறப்பட்டுள்ளது. ஆட்சியரிடம் மனு அளித்த நிகழ்வில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐ டியு மாவட்ட தலைவர் பி.பாபு, மாவட்ட செய லாளர் ஆர்.நாகராஜ், பல்லடம் செயலாளர் பி. ராமலிங்கம், ஜி.கே.பழனியப்பன், ஜி.மோக னசுந்தரம், சிஐடியு மாவட்ட செயலாளர் கே. ரங்கராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.