districts

img

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்எச்எம் ஊழியர்களுக்கு சட்டப்படி ஊதியம் வழங்க கோரிக்கை

திருப்பூர், மே 3 – திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை செய்யும் தேசிய சுகாதார இயக்கம் (என்.எச்.எம்) ஒப்பந்தப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சட்டப்படி தினக்கூலி நிர்ணயித்து வழங்க வேண்டும் என்று திருப் பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட் சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில்  மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துரா ஜிடம் கோரிக்கை மனு அளித்து வலி யுறுத்தப்பட்டது. சிஐடியு திருப்பூர் மாவட்டச் செய லாளர் கே.ரங்கராஜ் தலைமையில் என்எச்எம் ஒப்பந்தப் பணியாளர்கள் வியாழனன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கை குறித்து மனு அளித்தனர். இந்த மனு வில் கூறியிருப்பதாவது: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் கடந்த பல ஆண்டுக ளாக தேசிய சுகாதார இயக்கம் (என்எச்எம்) ஒப்பந்த ஊழியர்களாக 25க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். மகப்பேறு மருத்து வப் பிரிவில் பல்வேறு சுகாதார வேலைகளையும் இந்த ஊழியர்கள் செய்து வருகின்றனர். தற்போது இவர்களுக்கு மாத ஊதியமாக (பிடித்தம் போக) ரூ.8500  மட்டுமே வழங்கப்படுகிறது. தற்போ துள்ள விலைவாசி நிலவரத்தில் மேற்கண்ட ஊதியத்துடன் இவர்கள்  மிகுந்த சிரமத்துடன் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு அர சின் குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல் நோக்கு மருத்துவமனையில் பணி யாற்றும் ஊழியர்களுக்கு, திருப்பூர்  மாவட்ட ஆட்சியர் செயல்முறை உத்தரவு ந.க. எண் அ1/1194/2023 இன்படி ரூ.725 தினசரி ஊதியமாக வழங்க வேண்டும்.  எனவே, மேற்கண்ட தமிழ்நாடு அரசின் குறைந்தபட்ச ஊதிய அர சாணைப்படி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படியும் என்எச் எம் ஊழியர்களுக்கு ரூ.725 தின சரி ஊதியமாக கணக்கிட்டு வழங்க  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று சிஐடியு சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர். இத்துடன் திருப்பூர் அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர், சுகாதாரப் பணிகள்  துணை இயக்குநர் உள்ளிட்டோரிட மும் குறைந்தபட்ச ஊதிய சட்டப் படி இவர்களுக்கு ஊதியம் வழங்க  வேண்டும் என சிஐடியு சார்பில் வெள்ளியன்று கோரி மனு அளித்துள் ளனர்.