பாலக்கோடு பேரூராட்சி பொது கழிவறையில் கட்டணக் கொள்ளை
தருமபுரி, ஜூன் 7- பாலக்கோடு பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பறையில் நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்ட ணம் வசூல் செய்வதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண் டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையத் திற்கு 200க்கும் மேற்பட்ட உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாவட்ட பேருந்துகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். பாலக்கோடு பேரூராட்சி 18 ஆவது வார்டில் பயணிகளின் நலன் கருதி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொதுக் கழிவறை கட்டப்பட்டு பயன்பாட் டில் இருந்து வருகிறது, தற்போது பொதுக் கழிவறையில் அரசு நிர்ணயித்த தொகையான சிறுநீர் கழிக்க 2 ரூபாயும், மலம் கழிக்க 3 ரூபாயும் கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது. பேரூராட்சி நிர்வாகம் கழிவறையை தனிநபருக்கு ஏலம் விடப்பட்ட நிலையில் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுநீர் கழிக்க 8ரூபாயும், மலம் கழிக்க 10 ரூபா யும் வாங்குவதால் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கட்டணம் அதிகமாக வசூலிப்பதால் பயணிகள் திறந்த வெளியில் சிறு நீர் கழித்து சென்று விடுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசி பேருந்து நிலைய சுகாதாரம் கேள்விக்குரியாக உள்ளது. மேலும் கழிவறை போதிய பராமரிப்பு இன்றி துர்நாற் றம் வீசுவதாகவும், தூய்மையின்றி சுகாதாரமற்ற சூழலில் கழிவறை செயல்பட்டு வருவதாக பயணிகளும், பொதுமக்க ளும் குற்றம் சாட்டுகின்றனர்.பெரு நகரங்களில் கூட அதிக பட்சமாக 5 ரூபாய்தான் வசூலிக்கப்படுகிறது. ஆனால், பாலக் கோடு பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையில் கட்ட ணக் கொள்ளை நடந்து வருகிறது.பேரூராட்சி நிர்வாகம் திடீர் ஆய்வு செய்து ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என பயணிகள் தெரிவிக்கின்றனர்.
பணம் தர மறுத்த நண்பருக்கு கத்திக்குத்து
கோவை, ஜூன் 7- கோவையில் செலவுக்கு பணம் தர மறுத்த நண்பரை கத்தியால் தாக்கிய சம்பவம் அப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை புலியகுளம் அம்மன் குளம் 2 ஆவது வீதியை சேர்ந்தவர் அபிஷேக் (21). இவர் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அபிஷேக் வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது பாப்பநாயக்கன்பாளையம் அருகே அவரது நண்பர் கோகுலகிருஷ்ணன் (23) என்பவர், அபிஷேக்கிடம் செலவுக்கு பணம் கேட்டுள் ளார். அதற்கு அவர் தற்போது பணம் இல்லை என தெரிவித்துள்ளார். அப்போது, கோகுலகிருஷ்ணன் அங்கி ருந்த பீர் பாட்டிலை எடுத்து அபிஷேக்கை தாக்கியுள்ளார். பின்னர் தான் வைத்திருந்த கத்தியால் அபிஷேக்கை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். இதையடுத்து பலத்த காயமடைந்த அபி ஷேக்கை, அருகிலிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை காக சேர்த்தனர். மேலும், இதுகுறித்து பந் தயசாலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கோகுல கிருஷ்ணனனை தேடி வருகின்றனர்.
பள்ளி மாணவி கடத்தல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஒருவர் கைது
தருமபுரி, ஜூன் 7- அரூர் அருகே பள்ளி மாணவி கடத்தப்பட்ட வழக்கில் ஒரு வரை கைது செய்த போலீசார் அவரை வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்குப்ப திவு செய்து சிறையில் அடைத்தனர். தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த பாப்பம்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் 11 வகுப்பு பயிலும் மாணவி ஒரு வர் கடத்தப்பட்டார். பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும் பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அரூர் காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். புகாரையடுத்து ஓட்டுநர் கார்த்திக் கிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். இதில் அஜித் என்பவர் மாணவியை கடத்தியது தெரியவந்தது. மாணவி கடத்தலுக்கு உதவியாக ஓட்டுநர் கார்த்திக் இருந்தது தெரியவந்ததையடுத்து கடந்த 31 ஆம் தேதி அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் தனிப்படை அமைத்து போலீசார் அஜித்தை தேடி வந்தனர். இந்நிலையில், பெங்களூரில் உள்ளதாக கிடைத்த தகவ லின் பேரில் அரூர் உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசார் சென்று அஜித்தை பிடித்து மாணவியை மீட்டு பெற்றோரி டம் ஒப்படைத்தனர். பின்பு, அஜித்தை கைது செய்த போலீ சார் எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், பெண் குழந்தைகள் கடத்தல் மற்றும் போக்சோ ஆகிய மூன்று பிரி வின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
சூதாட்டம் 4 பேர் கைது
பொள்ளாச்சி, ஜூன் 7- கிணத்துக்கடவு அருகே பணம் வைத்து சூதாட்டத் தில் ஈடுபட்ட 4 பேரை காவல் துறையினர் கைது செய்த னர். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந் தில்குமார் தலைமையிலான போலீசார் கொண்டலம் பட்டி பகுதியில் ரோந்து பணி யில் ஈடுபட்டிருந்தனர். அப் போது எம்ஜிஆர் நகரில் கொண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், வடசித் தூர் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ், முருகன், சபரி ஆகியோர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த னர். இதையடுத்து அவர் களை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களி டமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சீட்டுகள் மற் றும் 500 ரூபாய் பணத்தை யும் பறிமுதல் செய்தனர்.
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை உடனே வழங்க கோரிக்கை
திருப்பூர், ஜூன் 7- தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் திருப்பூரில் திங்கள் கிழமை மாநிலத் தலைவர் என்.நாராயணன் தலைமை யில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஈ.மாயமலை உள் பட மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் ஓய்வூதியர் சங்கத்தின் நான்காவது மாநாட்டை தூத்துக்குடியில் ஜூலை 30, 31 தேதிகளில் நடத்து வது, இம்மாநாட்டுக்கு முதல்வர், சமூகநலத் துறை அமைச்சர் ஆகியோரை அழைப்பது என்றும் முடிவு செய்யப் பட்டது. குறைந்தபட்ச பென்சன் அகவிலைப்படியுடன் ரூ.7850, மருத்துவப்படி, மருத்துவக் காப்பீடு, குடும்ப ஓய்வூதியம், குடும்ப நல நிதி ரூ.50 ஆயிரம், ஈமக்கிரியை நிதி ரூ.25 ஆயிரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் படி தமிழக அரசை கேட்டுக் கொள்வது, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஆண்டுக் கணக்கில் இபிஎப் வழங்குவது என்ற நடைமுறையை மாற்றி ஓய்வு பெறும் நாளன்றே வழங் குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. இந்த பிரச்சனைக்கு ஜூன் 20ஆம் தேதியன்று மனுக் கொடுக்கும் இயக்கம் நடத்தவும் தீர்மானிக்கப் பட்டது. முன்னதாக திருப்பூர் மாவட்டச் செயலாளர் பால்ராஜ் வரவேற்றார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் என்.சுசீலா நன்றி கூறினார்.
பேருந்தில் செல்போன் பயன்பாடு பயணிகளுக்கு அறிவுறுத்தல்
திருப்பூர், ஜூன் 7- பேருந்தில் பயணம் செய்யும்போது சக பயணிகளுக்கு இடையூறு, தொந்தரவு இல்லாதபடி ஹெட்போன், இயர் போன் பயன்படுத்துமாறு போக்குவரத்து நிர்வாகம் அறிவு றுத்தி உள்ளது. பேருந்துகளில் இயர்போன் பயன்படுத்தாமல் பேச வும், பாடல்கள் கேட்கவும், வீடியோ கேம் விளையாடவும் தமிழ்நாடு அரசு தடை செய்துள்ளது பேருந்துகளில் பயணம் செய்கிறபோது பிற பயணிகளுக்கு கோபம், எரிச்சல் போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தும் வகையில் செல்போன் பயன்பாடு அதிகரித்து உள் ளது. இந்நிலையில் பிரச்சனை ஏற்படுகிறபோது பய ணிகள் நடத்துனரிடர் புகார் செய்தால், பிரச்சினைக்குரிய நப ரிடம் நடத்துனர் வேண்டுகோள் விடுத்தாலும், சில பயணிகள் தகராறு செய்து, பிரச்சனையை பெரிதுபடுத்தி விடுகிறார்கள். இதை கட்டுபடுத்த உரிய அதிகாரம் இல்லாத தால் நடந்துனர் ஓர் எல்லைக்கு மேல் எதுவும் செய்ய முடி யாத நிலை உள்ளது. இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த கே.எல்.பொன் னுச்சாமி என்பவர் இது சம்பந்தமாக தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினார். இதன்பேரில் உரிய நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் பேருந்துகளில் இயர்போன் பயன்படுத்தா மல் பிற பயணிகளுக்கு தொல்லை ஏற்படுத்தினால் பயணி யைப் பேருந்திலிருந்து இறக்கி விடவும், பயணக் கட்ட னத்தை இழக்கவும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவ ருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து போக்கு வரத்து கழக மேலாண்மை இயக்குநர்களுக்கும் இது குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது என்றும் போக் குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர் தென்மேற்கு பருவமழை - முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை
திருப்பூர் ஜூன் 7- கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களில், தென் மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற் கொள்ள வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் கூறுகையில், தாலுகா அலுவலகங்களில் 24 மணி நேரமும், கண்கா ணிப்பு பணி நடக்கும் வகையில், சுழற்சி முறையில் பணி நேரம் மாற்றி அமைக்கப்படும். தமிழக அரசு வழிகாட்டுதல் களை பின்பற்றி, தாலுகாவுக்கு ஒரு துணை ஆட்சியர் அதிகாரிகள் தலைமையில் பேரிடர் மேலாண்மை குழு அமைத்து கண்காணிக்கப்படும். விரைவில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முன்னேற்பாடுகளை துவக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்றனர்.
மின் குறை தீர்க்கும் நாள்
தாராபுரம், ஜீன் 7- தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பல்லடம் மின்பகிர்மான வட் டம், தாராபுரம் கோட்டத் திற்குட்பட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 8 ஆம் தேதி புதன்கிழமை மேற்பார்வை பொறியாளர் பல்லடம் மின்பகிர்மான வட் டம் பல்லடம் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. தாராபுரம் தள வாய்பட்டிணம் சாலையில் உள்ள மின்வாரிய கோட்டப் பொறியாளர் அலுவலகத் தில் காலை 11 மணி முதல் 2.00 மணி வரை நடைபெற உள்ள கூட்டத்தில் பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு செயற்பொ றியாளர் வ.பாலன் தெரி வித்துள்ளார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்: வட்டியில்லாக் கடன்கள் வழங்கப்படுகிறது
திருப்பூர் ஜூன் 7- திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் விவசாயிகளுக்கு வட்டி யில்லா பயிர்க்கடன் கால்நடை பராமரிப்பு கடன் மாற்றுத்திற னாளிகளுக்கான கடன் குறைந்த வட்டியில் சுயஉதவிக்குழு கடன் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் பொரு ளாதார மேம்பாட்டுக் கடன் மற்றும் மாவட்ட மத்திய கூட்டு றவு வங்கிகளின் கிளைகளில் விதவைகள் மற்றும் ஆதர வற்ற விதவைகளுக்கான கடன் போன்ற அனைத்து வித மான கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டு றவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை யுடன் பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. திருப் பூர் மாவட்ட விவசாயிகள் ஆதார் நகல் நியாய விலைக்கடை அட்டை நகல் நிலவுடைமை தொடர்பான கணினி சிட்டா பயிர் சாகுபடி தொடர்பாக கிராம அலுவ லர். அடங்கல் சான்று பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகிய வற்றுடன் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி கடன் மனு சமர்ப்பித்து பயிர்க்கடன் மற்றும் இதரக் கடன்கள் பெற்றுப் பயனடையலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.வினீத் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சட்டவிரோதமாக செயல்படும் மதுபானக்கடை தடுத்து நிறுத்த சிபிஎம் கவுன்சிலர் கோரிக்கை
திருப்பூர், ஜூன் 7- திருப்பூர் மாவட்டம் ஊத்துக் குளி சென்னிமலை சாலையில் சட்ட விரோதமாக 24 மணி நேரமும் செயல்படும் டாஸ்மாக் மதுபானக் கடை மற்றும் பார் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி பேரூராட்சி 7ஆவது வார்டு உறுப்பினர் சரஸ்வதி குமார் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து திங்களன்று அவர் தெரிவித்ததாவது, ஊத்துக்குளி - சென்னிமலை ரோடு, டாஸ்மாக் ஒயின் ஷாப் கடை எண். 3096 கடை யில் பகிரங்கமாக 24 மணி நேரமும் மது விற்கப்படுகிறது. பார் உரிமம் இன்றி 24 மணி நேரமும் செயல்படுகிறது. பாரில் எந்த நேர மும் மது வகைகள் கிடைக்கிறது. அப்புறம் எதற்கு நேர கட்டுப்பாடு அறிவிப்பு? டாஸ்மாக் நிர்வாகம், காவல்துறை மற்றும் இதர துறைக ளுக்கு தெரிந்தே இது நடைபெறு கிறது. இதனால், இந்த பகுதியில் வசிப் போர், காலையில் வேலைக்குச் செல்வோர் குறிப்பாக பெண்கள், மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். குடிவெறி யர்கள் சாலையில் நின்று தகராறு செய்து வருகிறார்கள். இப்பகுதி யில் இருக்கும் சென்னிமலை ரோடு, குளத்தோட்டம், கிணத்தாங்காடு, வடக்கு தோட்டம், தேனீஸ்வரம்பா ளையம், புதுபாளையம், கரட்டுப்பா ளையம், கே.கே.நகர், பி. ராமமூர்த்தி நகர், வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கடும் பாதிப்பை சந்திக்கின்றனர். இது குறித்து முன்பே பலமுறை புகார் செய்தும் பெயரளவிற்கே நட வடிக்கை எடுக்கப்படுகிறது. திரும் பவும் அதே சட்டவிரோத செயல் பாடு தொடர்கிறது. எனவே காவல் துறையும், மாவட்ட நிர்வாகம் உறுதி யான நடவடிக்கை எடுத்து இந்த மது பானக் கடை மற்றும் பாரின் சட்ட விரோத செயல்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். இந்நிலை தொடர்ந்தால் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நேரடி போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்று சரஸ்வதி குமார் கூறியுள்ளார்.
சாக்கடை கட்டித் தர சிபிஎம் கோரிக்கை
திருப்பூர், ஜூன் 7- காங்கேயம் பழைய கோட்டை சாலை அய்யா சாமி நகர் 3ஆவது வீதி யில் இடிந்து போயுள்ள சாக் கடையை புதிதாக கட்டித் தரும்படி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மார்க் சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு உறுப்பினர் கே.திருவேங்கடசாமி மற் றும் அப்பகுதி மக்கள் கையெழுத்திட்ட மனுவை செவ்வாய்க்கிழமை காங்க யம் நகராட்சி ஆணையரிடம் நேரில் வழங்கி கோரிக் கையை வலியுறுத் தினர்.