கோவை, டிச.9- சென்னை மிக்ஜம் புயல் வெள் ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் துறையினருக்கும் பேரிடர் நிதி ஒதுக்க வேண்டும். வங்கி கடன் மற் றும் மின் கட்டணம் செலுத்த இரண்டு மாத கால அவகாசம் வழங்க வேண் டும் என தொழில் துறை மின் நுகர் வோர் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். கோவையில் தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப் பின் ஆலோசனை கூட்டம் நடைபெற் றது. இதில், சென்னை உள்ளிட்ட பல் வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழில் அமைப்பினர் கலந்து கொண் டனர். இதனைத்தொடர்ந்து இக்கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் செய்தியாளர்களிடம் கூறு கையில், மிக்ஜம் புயல் வெள்ளம் புனரமைப்பு வழிகள் செய்கின்றனர். இதில் தொழில் துறையினர் புறக் கணிப்படுகிறோம். அம்பத்தூர் எஸ் டேட்டில் நிறுவனங்களின் இயந்தி ரங்கள் நீரில் மூழ்கி சுமார் ரூ.2 ஆயிரம் கோடி நட்டம் ஏற்பட்டு, முழுமை யாக தொழில் நிறுவனங்கள் முடக்கப் பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழு வதும் தொழில் முடங்கியுள்ளது. ஒரு சில தனியார் தொழில்பேட்டை இருந் தாலும், பெரும்பாலும் அரசு தொழில் பேட்டை தான் உள்ளது. அரசை நம் பியே நாங்கள் முதலீடு செய்துள் ளோம். மொத்தமாக புயல் வெள்ளம் காரணமாக தொழில்முறையின ருக்கு சுமார் 3 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை யும் தொடச்சியாக தொழில் துறை பாதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொடங்கி, மூலப்பொருள் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு போன்ற நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களை பாதுகாக்க வேண் டும். ஒன்றிய அரசின் தேசிய நிவா ரண நிதி தொழில்துறைக்கு சேராது. இதில், தொழிற்துறையை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினோம், ஒன்றிய அரசு ஏற்க வேண்டும் தமிழக அரசு அதனை வலியுறுத்த வேண் டும். சில நிறுவன இயந்திரத்திற்கு காப்பீடு இருக்காது. இதனால் தொழில் துறையினர் நிர்க்கதியாக நிற்கின்றனர், பாதிக்கப்பட்ட தொழில் துறையினருக்கு தனி நிதி ஒதுக்க வேண்டும் என ஒன்றிய, மாநில அரசு களை வலியுறுத்துகிறோம். பேரிட ரில் இருந்து மீண்டும் திரும்பி வர 6 மாதமாகும். ஒன்றிய, மாநில தொழில் துறையை பாதுகாக்க வேண்டும். மின் கட்டணம் செலுத்த 18 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ள னர். ஆனால், 2 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும். மின் கட்டண உயர்வை கண்டித்தும் வரும் 12 ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த இருந்தோம், புயல் வெள்ளம் காரணமாக மனித சங்கிலி போராட் டம் வரும் 27 ஆம் தேதிக்கு மாற்றி ஒத்திவைக்கப்படுகிறது, என்றார்.