திருப்பூர், ஜூன் 18 - சின்ன வெங்காயம் பயிர் செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் குடிமங்கலம் ஒன் றிய மாநாடு கோரிக்கை விடுத்துள் ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஒன் றிய மாநாடு சனியன்று எஸ்.வல்ல குண்டாபுரம் கே.மாரிமுத்து தோட்டத் தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு எம்.சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். மாநாட்டு கொடியை கே.எஸ். நடராஜ் ஏற்றி வைத்தார். கே.மகேந்திரன் வர வேற்றார். டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிக ளுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட் டது. மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட செயலாளர் ஆர்.குமார் உரை யாற்றினார். ஒன்றிய அமைப்புக்குழு கன்வீனர் சி.ஜெ.ஸ்ரீதர் வேலை அறிக்கை முன்வைத்தார். கொண்டம் பட்டி நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் டி.மனோகர் வாழ்த்தி பேசி னார். புதிய நிர்வாகிகள் தேர்வு: குடிமங்கலம் ஒன்றியத் தலை வராக எம்.சுந்தரராஜன், செயலாள ராக சி.ஜெ.ஸ்ரீதர், பொருளாளராக கே. மகேந்திரன், துணைத் தலைவராக கே. மாரிமுத்து, துணைச் செயலாளராக எம்.ரமேஷ் ஆகியோரை உள்ளடக்கி 13 கமிட்டி உறுப்பினர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இம்மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்: உரித்த தேங்காய்க்கு கிலோ ஒன்றுக்கு ரூ.40 வழங்க வேண்டும். குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள உப் பாறு கரைப் பகுதியில் உள்ள சீமை கரு வேல மரங்களை உடனே அகற்ற வேண்டும். சின்ன வெங்காயம் பயிர் செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். எஸ்.வல்லகுண்டாபுரம் முதல் இலுப்பு நகரம் செல்லும் பழுதடைந்த தார் சாலையை உடனடியாக புதுப்பிக்க வேண்டும். குடிமங்கலம் ஒன்றியத் தில் உள்ள குளம் குட்டைகளில் வண் டல் மண் எடுக்க எளிய முறையில் அனு மதி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட் டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட மாநாட்டு நிதி யாக ரூ.5 ஆயிரம் குடிமங்கலம் ஒன் றிய குழு சார்பில் வழங்கப்பட்டது. இம் மாநாட்டில் மாநிலத் துணைத் தலை வர் எஸ்.ஆர்.மதுசூதனன் நிறைவுரை ஆற்றினார். கே.மாரிமுத்து நன்றி தெரி வித்தார்.