districts

img

“பேருந்து வசதி கேட்டு 40 ஆண்டு ஆச்சு”

தருமபுரி, பிப்.15- பென்னாகரம் அருகே பேருந்து வசதி கேட்டு, 40 ஆண்டு களாகியும் கோரிக்கையை நிறைவேற்றாத அதிகாரிகளை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், அரகாசன ஹள்ளி ஊராட்சி, வீரப்பட்டி பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியிலிருந்து பென்னாகரத்திற்கு சுமார் 40 ஆண்டு காலமாக பேருந்து வசதி  இல்லை. வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவ லகம், பத்திரப்பதிவு துறை அலுவலகம், வேளாண்மை துறை  மற்றும் வங்கிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பென்னாகரத்திற்கு செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, அப்பகுதியினர் தொடர்ந்து அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் நிறைவேற்றவில்லை. 40 ஆண்டுகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் நிறைவேறாததால் ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அரகாசனஅள்ளியில் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.