பொள்ளாச்சி, ஜுன் 20- பழங்குடியினர் வீட்டைச் சுற்றி தென்னை ஓலை கொண்டு தடுப்பு வேலி கள் அமைத்துள்ள ஆதிக்க சாதியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து பொள்ளாச்சி சார் ஆட்சி யர் அலுவலகத்தில் ஆனைமலையை அடுத்த செம்மேடு பகுதி பழங்குடியினத் தைச் சேர்ந்த தங்கவேல் (57) என்பவர் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதா வது, கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த செம்மேடு கிராமத்தில் பழங்குடி யின குடும்பங்களும், தலித் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களும், ஊரைச் சுற்றியுள்ள விவசாய பூமிகளில் 17 குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இதில், செம்மேடு விநாயகர் தெருவில் பழங் குடியின மலசர் சமூகத்தைச் சேர்ந்த நான் குடும்பத்துடன் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறேன். மனைவி இரண்டு வரு டங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். மூத்த மகள் மாரியம்மாள் (26) மனவளர்ச்சி குன் றிய நிலையில் இவரது இரண்டாவது மகள் முருகாத்தாள் (24) பராமரித்து வருகிறேன். இதற்கிடையே, கடந்த 1993 ஆம் ஆண்டு வருவாய்த்துறையின் மூலமாக தனக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அப் போது, வீட்டின் அருகிலுள்ள அருந்ததி யர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களது பட்டா நிலத்தை மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் மற்றும் கோவிந்தராஜ் ஆகி யோருக்கு விற்பனை செய்துள்ளனர். இந்நிலையில், ஆதிக்கசாதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் என் வீட்டிற்கு செல்லும் வழியை மறித்து, அவரது வீட்டினைச் சுற்றி தென்னை ஓலைகளைக் கொண்டு தடுப்பு அமைத்துள் ளனர். இதுகுறித்து அவர்களிடம் கேள்வி கேட்டால் கொலை மிரட்டல் விடுத்துள்ள னர். எனவே, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதியளித்தார்.