districts

img

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு ஊழியர்களுக்கு 20 சதவிகித போனஸ் வழங்க கோரிக்கை

திருப்பூர், அக்.10– திருப்பூர் மாவட்ட கூட்டுறவு ஊழியர்களுக்கு 20 சதவிகி தம் போனஸ் வழங்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கூட்டு றவுப் பணியாளர் சங்கம் கோரியுள்ளது. திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க நிர்வாகக் குழு கூட்டம் திங்களன்று சிஐடியு அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் பி.கௌதமன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து கூட்டுறவு ஊழியர்களுக்கும் 20 சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும். நியாய விலை கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்கள் எடை குறைவில்லாமல் தரமானதாக நல்ல நிலை யில் உள்ள சாக்குகளில், கால தாமதமின்றி ஒரே முறையில் அனுப்ப வேண்டும். சமூக ஆர்வலர் என்ற பெயரில் பொய் யான தகவலை பரப்பி பணியாளர்களுக்கு மனஉளைச் சலை ஏற்படுத்திவரும் நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாய விலை கடைகளில் தேங்கியுள்ள காலி சாக்குகளை உடனே எடுக்க வேண்டும். கலைஞர் மகளிர் உரிமை திட்ட களப்பணி ஆற்றிய பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கே.மகேந்திரன், மாவட்டப் பொருளாளர் பி.சுரேஷ் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகி கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.