districts

img

சரிந்து வரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்

சேலம், அக்.2- மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் டெல்டா  விவசாயிகள் கவலைய டைந்துள்ளனர். காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை தருவதற்கு கர்நாடக அரசு தொடர்ந்து முரண்டு பிடித்து வரு கிறது.  காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தும் அதனை கர்நாடகா மதிக்காததால், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தர விட்டுதான் அமல்படுத்தப்படும் சூழல் உள்ளது. அத்துடன், ஒவ்வொரு முறையும் உச்ச நீதி மன்றத்தை நாடியே தமிழகத் திற்கான உரிமை பெறப்பட்டு வரு கிறது. காவிரி விவகாரத்தில் ஆணை யத்தின் உத்தரவுகளில் தலையிட முடியாது என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாட காவுக்கு அதிரடியாக உத்தர விட்டது. இதனால் சில நாட்கள் மட்டும் சற்று தண்ணீரை தமிழகத் திற்கு திறந்துவிட்டது கர்நாடகா. இந்த நிலையில் வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தமிழகத்திற்கு செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிட காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. ஆனால், தங்களுக்கு போதுமான தண்ணீர் இல்லை என்று கூறி குறைந்த அளவே தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டது. இதனையடுத்து கூடிய காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் தமிழகத்திற்கான தண்ணீர் திறப்பை உறுதி செய்தது.  ஆனாலும் கர்நாடகாவில் குடி நீருக்கே போதுமான தண்ணீர் இல்லை எனக் கூறி தமிழகத்திற்கு கர்நாடகா தண்ணீரை திறந்து விடவில்லை. மேலும், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிராக உச்ச  நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந் துள்ளது.  அதே சமயம் கர்நாடக அணை களில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடும் தண்ணீரை குறைத்ததாலும், தமிழகத்தின் காவிரி நீர் பிடிப்பு  பகுதிகளில் மழை நின்றுவிட்ட தாலும் மேட்டூர் அணை நிலவரம் தொடர்ந்து கவலைக்குரியதாகவே உள்ளது. ஞாயிறன்று  

காலை 8  மணி நிலவரப்படி மேட்டூர் அணை யின் நீர்மட்டம் 37.50 அடியிலிருந்து 36.94 அடியாக சரிவை கண்டுள் ளது. தற்போது அணையில் 10.56 டிஎம்சி என்ற வீதத்தில் மட்டுமே நீர்  இருப்பு உள்ளது. மேட்டூர் அணைக் கான நீர் வரத்து வினா டிக்கு 4,524 கன அடி என்று இருந்த  நிலையில் 3,446 கன அடியாக குறைந்துள்ளது. டெல்டா பாசனத் திற்காக விநாடிக்கு 6,500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. வரத்து குறைவாகவும், வெளி யேற்றம் அதிகமாகவும் இருப்ப தால் மேட்டூர் அணை நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் அதனைக் கொண்டு இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும். தற்போதே அணை யில் மூழ்கியிருந்த புராதன சின்னங்கள் வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டன. இதனால், அதையே நம்பி காத்திருக்கும் டெல்டா விவசாயிகளின் குறுவைப் நெற்பயிர்கள் கருகும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 3,000 கன அடி தண்ணீரே போதுமானது என்று தெரி வித்திருந்தார் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன். ஆனால், அதையுமே கூட கர்நாடகா திறக்க வில்லை. ஆகவே, தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட்டு தமிழ கத்திற்கு வர வேண்டிய நீரை பெற்றுத் தர வேண்டுமென விவசாயி கள் வலியுறுத்தி வருகின்றனர்.