திருப்பூர், நவ. 20 - திருப்பூர் தெற்கு ஒன்றியத்தில் சேர்க்கப் பட்ட 150 தீக்கதிர் ஆண்டு சந்தா தொகை யை தீக்கதிர் முதன்மைப் பொது மேலாளர் என்.பாண்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. திருப்பூர் தெற்கு ஒன்றியத்தில் மூன்று மையங்களில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சி பேரவை கூட்டங்களில் தீக்கதிர் முதன்மைப் பொது மேலாளரும், மாநிலக்குழு உறுப்பின ருமான என்.பாண்டி,கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் சி.மூர்த்தி, இடுவாய் ஊராட்சி மன்ற தலைவரும், கட்சியின் மாவட்ட குழு உறுப்பினருமான கே.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருப்பூர் தெற்கு ஒன்றிய குழு உறுப்பினர்கள், சி.சுப்பிர மணியம், குணசேகரன், மகேஷ், சண்முகம், லட்சுமி, வேலுச்சாமி, செல்வகுமார், கருப்பு சாமி, அங்கு லட்சுமி ஆகியோரும் பங்கேற் றனர். மூன்று பேரவைகளிலும் 200க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். 150 தீக்கதிர் ஆண்டு சந்தாக்களுக்கான தொகை தீக்கதிர் முதன்மை பொது மேலாளர் என்.பாண்டி யிடம் வழங்கப்பட்டது.