districts

img

வடமாநிலங்களில் இருந்து தானிய வகைகள் வரத்து தாமதம்

சேலம், ஜன.23- பருவமழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், வடமாநி லங்களில் தமிழகத்திற்கு இருந்து தானிய வகைகள் வரத்து தாமதமா கிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ஆந் திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங் களில் துவரை சாகுபடி செய்யப்படு கிறது. அதேபோல் தமிழகத்தில் சேலம், தருமபுரி, நாமக்கல், திண் டுக்கல், ஈரோடு உள்பட பல பகுதி களில் அவரை, தட்டைபயிறு, பச் சைப்பயிறு, கொள்ளு, நாட்டு கொத்தமல்லி, உளுந்து உள்ளிட்ட வைகள் சாகுபடி செய்யப்படுகிறது. வட மாநிலங்களில் அறுவடை செய் யப்படும் துவரம் பருப்பு இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. இதில் 30 சதவிகிதத்திற்கு மேலான துவரம் பருப்பு தமிழகத்திற்கு ஏற்று மதி செய்யப்படுகிறது. இந்நிலை யில் கடந்தாண்டு தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக கடந் தாண்டை காட்டிலும் நடப்பாண்டு  பருப்பு, தானிய வகைகளின் விளைச் சல் சற்று குறைந்துள்ளது. வழக்க மாக ஒவ்வொரு ஆண்டும் ஜன.20 ஆம் தேதிக்கு மேல் தமிழகம் மற் றும் வட மாநிலங்களில் இருந்து பருப்பு, தானிய வகைகள் சந் தைக்கு விற்பனைக்கு வரும். ஆனால், மழையால் நடப்பாண்டு பிப்.15 ஆம் தேதிக்கு மேல் தான் பருப்பு, தானிய வகைகளின் வரத்து இருக்கும் என்று வியாபாரிகள் தெரி வித்துள்ளனர். இதுகுறித்து சேலத்தைச் சேர்ந்த பருப்பு வியாபாரிகள் கூறுகை யில், தமிழகத்தின் மொத்த துவரம் பருப்பு தேவையை வடமாநிலங்கள் தான் பூர்த்தி செய்கிறது. கடந்த சில  மாதங்களாகவே துவரம் பருப்பு விலை அதிகரித்து இருந்தது. தற் போது முதல் தரம் துவரம் பருப்பு கிலோ ரூ.100 என்றும், இரண்டாம் தரம் ரூ.90 என்றும், மூன்றாம் தரம்  ரூ.80 என்றும் விற்பனை செய்யப்படு கிறது. அதேபோல் ஒரு சில பொருட் களின் விலை சற்று உயர்ந்துள்ளது. பொதுவாக தமிழகத்தை காட்டி லும் வடமாநிலங்களில் இருந்து தான் 70 சதவிகித பொருட்கள் வரு கிறது. மீதமுள்ள 30 சதவீதம் தான்  தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந் தாண்டு வடமாநிலங்களில் தொடர் மழையால் பல இடங்களில் சாகு படி செய்த பயிர்கள் மழைநீரில் மூழ்கியது. இதன் காரணமாக வட  மாநிலங்களில் 20 முதல் 30 சதவிகி தம் விளைச்சல் பாதித்துள்ளது. அதேபோல் தமிழகத்திலும் விளைச் சல் குறைந்துள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு துவரம் பருப்பு முதல் அனைத்து பருப்பு வகைகள், தானிய வகைகள் விற்பனைக்கு வரும். இவைகளை பிப்ரவரி இரண் டாவது வாரத்தில் இருந்து விற் பனைக்கு குவிப்போம். விளைச்சல்  பாதிப்பால் நடப்பாண்டு பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு மேல் தான் புதுப் பொருட்கள் வர இருக்கிறது. இவை கள் மார்ச் 1 ஆம் தேதிக்கு மேல்  தான் விற்பனைக்கு குவிக்கப்படும். பருப்பு வகைகள், தானிய வகைகள் குறைந்து இருந்தாலும் விலை ஏற வாய்ப்பில்லை. நடப்பாண்டு வட மாநிலங்களில் இருந்து அதிகள வில் புதுப்பொருட்கள் வரும் என்று  எதிர்பார்க்கிறோம்.  இந்த வகையில், உடைக்காத துவரை (மகாராஷ்டிரா) கிலோ ரூ.50, (கர்நாடகா) துவரை ரூ.65 என் றும், அவரை கொட்டை ரூ.40 லிருந்து ரூ.45 என்றும், கொள்ளு ரூ.45, பச்சைப்பயிறு ரூ.75, தட்டைப் பயிறு ரூ.65 எனவும் உள்ளது. கடந் தாண்டை காட்டிலும் நடப்பாண்டு உளுந்து விளைச்சல் அதிகமாக உள்ளது. அதனால் வரத்து அதிக ரித்துள்ளது. இதனால் ரூ.85க்கு விற்ற உளுந்து ரூ.70ஆக சரிந்துள் ளது. இதேபோல் மற்ற பருப்பு வகை கள், தானிய வகைகளின் விலை சற்று அதிகரித்துள்ளது. ஒரு சில பொருட்களின் விலை சரிந்துள்ளது, என்றனர்.