districts

img

மோடிக்கு தோல்வி உறுதி, இந்தியா கூட்டணிக்கு வெற்றி உறுதி

திருப்பூர், ஏப். 3 - பாஜக ஆட்சி இளைஞர்களை அழிவுப் பாதையில் தள்ளுகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறினார். திருப்பூர் ராயபுரத்தில் புதன்கி ழமை நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் தேர்தல் பிரச் சார பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை பேசியதா வது: மோடி அரசின் தவறான ஆட்சி யால் ஒவ்வொருவர் தலையிலும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்  கடன் உள்ளது. இந்த சர்வாதிகார  ஆட்சி மக்களிடம் இருக்கும் பணத்தை எடுத்து கார்ப்பரேட்டுக ளுக்கு கொடுத்துக் கொண்டிருக்கி றது. மோடி ஆட்சிக்கு வரும்போது  உலக அளவில் பணக்காரர்கள் பட் டியலில் 609 வது இடத்தில் இருந்த அதானி இப்போது 13ஆவது இடத் திற்கு வந்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 2,229 சதவீதம் அதிக ரித்துள்ளது. அவரிடம் இருப்பது யார் பணம்? மக்களின் பணம்.  வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்த தேசத்தில், இந்துக் களை ஏமாற்றக்கூடிய ஆட்சியாக பாஜக ஆட்சி உள்ளது. தமிழ்நாட் டில் போதைப்பொருள் கலாச்சா ரம் எங்கிருந்து வருகிறது? குஜ ராத்தின் கான்ட்லா துறைமுகத் திலிருந்தும், ஆந்திராவின் கிருஷ்ண பட்டினம் துறைமுகத்தி லிருந்தும் போதைப்பொருள் கடத்தப்பட்டு நாடு முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது. இளை ஞர்களை அழிவு பாதையில் தள்ளு வதாக பாஜக ஆட்சி உள்ளது.  பாசிசம் வீழட்டும், இந்தியா வெல் லட்டும் என்ற முழக்கத்துடன் நாம் ஜனநாயகத்தை மீட்டெடுப்போம். இவ்வாறு செல்வப் பெருந்தகை கூறினார். இக்கூட்டத்திற்கு காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர். கிருஷ்ணன் தலைமை வகித்தார்.  திருப்பூர் தொகுதி இந்தியா கூட் டணி வேட்பாளர் கே.சுப்பராயன், மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச் சித் துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் உள்ளிட்டோர் உரை யாற்றினர். மாநகர மேயர் ந.தினேஷ்குமார், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் செ.  முத்துக்கண்ணன் உள்பட கூட்டணி  கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் மாநகர் மாவட்டச் செய லாளர் என்.ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். ஈரோடு இதேபோன்று, ஈரோட்டில் நாடாளுமன்ற வேட்பாளராகப் போட்டியிடும் இந்தியா கூட்டணி யின் திமுக வேட்பாளர் கே.இ. பிரகாஷை ஆதரித்து மரப்பாலத் தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை, மோடி சொன்ன எதையும் நிறைவேற்றவில்லை. மோடியின் ஆட்சி தமிழ் மொழியை  அழிப்பதற்கும், தமிழ் மக்களை வஞ்சிப்பதற்குமான ஆட்சியாகும்.  நான் வந்தால் ஊழல் வாதி களை ஒடுக்குவேன் என்கிறார். ஒரு  கட்சியிலிருந்து ஊழல் வழக்குக ளோடு பாஜகவில் சேர்ந்தால் புனித மானவர்களாக மாறிவிடுவர். பாசிச, அராஜக ஆட்சியை எவ்வ ளவு நாள் நடத்த முடியும்? ஆகவே  மோடிக்கு தோல்வி உறுதி. இந்தியா கூட்டணிக்கு வெற்றி  உறுதி என்றார். இப்பொதுகூட்டத் தில் வேட்பாளர் கே.இ.பிரகாஷ், திமுக தெற்கு மாவட்டச் செயலாள ரும், அமைச்சருமான சு.முத்து சாமி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ்.இளங்கோ வன், கொமுதேக இஆர்.ஈஸ்வரன், காங்கிரஸ் திருச்செல்வன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரிமுத்து, நகரச் செயலாளர் பி.சுந்தரராஜன், சிபிஐ மாவட்டச்  செயலாளர் எஸ்.டி.பிரபாகரன், முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா ளர் ஆரிப், திக சண்முகம் உள் ளிட்ட திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.