கோவை, மே 17- பாரதியார் பல்கலை கழகத்தில் நாய்கள் தாக்கி மான்கள் உயிரிழந்துள்ளது. கோவை வனச் சரகம், தடாகம் பிரிவு, மருதமலை சுற்றுக்கு உட்பட்ட பாரதியார் பல்கலைக் கழகத்தில் மூன்று மான்களை நாய்கள் துரத்துவதாக வனத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறையினர் தணிக்கை மேற்கொண்டனர். இதில் பாரதியார் பல்கலைக் கழகத்தின் கூடைப் பந்து விளையாட்டு மைதானத்தில் 3 மான்கள் ஆங்காங்கே இறந்த நிலையில் தென்பட்டு உள்ளது. அதன் அருகே சென்று பார்த்த போது மானின் உடலில் ரத்தக் காயங்கள் தென்பட்டு உள்ளது. மேலும் அப்பகுதியில் நாய்களின் கால் தடம் தென்பட்டு உள்ளது. உடனடியாக இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் மாவட்ட வன அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் மாவட்ட வன அலுவலர் அறிவுரை யின்படி வடவள்ளி கால்நடை மருத்துவரை கொண்டு இறந்த மான்களின் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் வனப் பகுதியில் இருந்து சுமார் 600 மீட்டர் தொலை வில் நடந்து உள்ளதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.