districts

img

கள்ளச்சாராய கொடூர மரணத்திற்கு முடிவு கட்டுக

கோவை, ஜூன் 25- கள்ளச்சாராய கொடூர மரணத் திற்கு முற்றுப்புள்ளி வைத்து போதை இல்லா தமிழ்நாட்டை உரு வாக்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைத்து கோவை யில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கரு ணாபுரத்தில் நடந்த துக்க நிகழ்ச் சிக்கு சென்றவர்கள், அங்கு சட்டவி ரோதமாக விற்பனை செய்த சார யத்தை வாங்கி அருந்தியுள்ளனர். இதன்பின், தங்களது வீட்டிற்கு  சென்றவர்கள் வாந்தி, வயிற்றெ ரிச்சல், கண் பார்வையிழப்பு ஏற் பட்டு மயக்கமடைந்தனர். இதனால்  அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவர்களை மீட்டு, கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவ மனைகள் மற்றும் புதுச்சேரியி லுள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென் றனர். ஆனால், அவர்களில் பலர்  அடுத்தடுத்து உயிரிழக்க தொடங் கினர். தொடர்ந்து உயிர்ப்பலி அதிக ரித்த வண்ணம் இருந்த நிலையில், நடைபெற்ற விசாரணையில் மெத் தனால் கலந்து சாராயம் விற்பனை  செய்யப்பட்ட தெரியவந்தது. நூற் றுக்கும் மேற்பட்டோர் விஷச்சாரா யத்தை அருந்தி, மருத்துவமனை யில் உயிருக்கு ஆபத்தான நிலை யில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட னர். அவர்களில் தற்போது வரை  55க்கும் மேற்பட்டோர் உயிரிழந் துள்ளனர்.  இச்சம்பவம் நடைபெற காரண மாக இருந்த விஷச்சாராய விற் பனையாளர்கள் 10க்கும் மேற்பட் டோர் கைது செய்யப்பட்டு, கொலை வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த பெருந்துயர சம்ப வத்தை தடுக்கத்தவறிய ஆட்சியர்  மற்றும் காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத் திற்கு பல்வேறு அரசியல் கட்சியின்  தலைவர்கள் நேரில் சென்று, ஆறு தல் தெரிவித்தனர். அதன் ஒருபகுதி யாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர் கள், கள்ளச்சாராயத்தை ஒழிப்ப தற்கு மார்க்சிஸ்ட் கட்சி துணை நிற் கும் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் கள்ளச் சாராயத்தை முற்றிலும் ஒழிக்க  மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்துக்கு கார ணமான காவல்துறை அதிகாரி களை கைது செய்ய வேண்டும். சமூக விரோத செயலுக்கு பின்பு லமாக உள்ள அரசியல் பிரமுகர் களை உடனடியாக கைது செய்ய  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட் டக்குழு சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டம், சிவா னந்தா காலனி பகுதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சி யின் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ஆறுச்சாமி தலைமை வகித் தார். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் கே.எஸ்.கனகராஜ் முன்னிலை  வகித்தார். மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன், மாவட்ட செயற்குழு  உறுப்பினர் யு.கே.சிவஞானம் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப்பொருள் புழக் கத்தை முற்றிலும் ஒழிக்க வேண் டும் என வலியுறுத்தி முழக்கங் களை எழுப்பினர்.