கோவை, ஆக.12- பணிநீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றி அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என சாலைப்பணி யாளர் சங்க கோவை கோட்ட மாநாடு வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத் தின் 8 ஆவது கோவை கோட்ட மாநாடு கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தாமஸ் கிளப்பில் நடைபெற்றது. கோட்டத் தலைவர் பி.முருகேசன் மாநாட் டிற்கு தலைமையேற்றார். சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தி.ராஜமாணிக்கம் மாநாட்டை துவக்கிவைத்து உரையாற்றி னார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ச.ஜெகநாதன் உள்ளிட்ட சகோதர சங்கங் களின் தலைவர்கள் வாழ்த்தி உரையாற்றி னர். சிஐடியு கோவை மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். இதில், சாலைப்பணியாளர்களுக்கு ஊதி யத்தில் 10 சதவிகிதம் ஆபத்துப்படி, நிரந்தர பயணப்படி, சீருடை சலவைப்படி வழங்கிட வேண்டும். 41 மாத பணிநீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி அரசு ஆணை வழங்க வேண்டும். டிஎ உள்ளிட்ட பணப் பலன்களை குறிப்பட்ட காலத்திற்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட் டில் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில், கோட்டத் தலைவராக பி.முரு கேசன், செயலாளராக பி.முருகன், பொரு ளாளராக சிவக்குமார் உட்பட 3 துணைத் தலைவர்கள், 3 துணைச்செயலாளர்களாக உட்பட 11 பேர் கொன்ட புதிய நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து சங்கத்தின் மாநிலத்தலைவர் மா.பால சுப்பிரமணியம் உரையாற்றினார். முடிவில், பொருளாளர் ஆர்.மூர்த்தி நன்றி கூறினார்.