கோவை, மார்ச் 10- சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டுமென தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் கோவை மண்டல கண்காணிப்பு பொறி யாளர் அலுவலகம் முன்பு வெள்ளி யன்று பட்டை நாமம் போட்டு தொடர் முழக்கப் போராட்டம் நடை பெற்றது. தொடர் முழக்கப் போராட்டத் திற்கு, கோவை மண்டலத் தலைவர் பி.முருகேசன் தலைமை ஏற்றார். இதில், சங்கத்தின் மாநில தலைவர் தி.ராஜமாணிக்கம், பொதுச் செயலாளர் ஆ.அம்சராஜ், சிஐடியு கோவை மாவட்ட செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, டிஎன்ஜிஇஏ மாவட்ட செயலாளர் ப.செந்தில் குமார் உள்ளிட்டோர் உரையாற் றினர். 41 மாத பணி நீக்க காலத்தை, பணி காலமாக அறிவிக்க வேண்டும், நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தலையிட வேண்டும் என வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில், கோட்ட நிர்வாகி கள் இளங்கோவன், ரா.கருப்பு சாமி, ச. ஜெகநாதன், பி.சிவக்குமார் உள்ளிட்ட சாலைப்பணியாளர் சங்கத்தின் கோவை, நீலகரி, பொள்ளாச்சி, கோபி கோட்டங் களை சேர்ந்த நூற்றுக்கு மேற் பட்டோர் பங்கேற்றனர். முடிவில், பொள்ளாச்சி கோட்டப் பொரு ளாளர் வி.சின்னமாரிமுத்து நன்றி கூறினார்.
சேலம்
இதேபோல், தமிழ்நாடு நெடுஞ் சாலை துறை சாலை பணியாளர் கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி சேலம் கண் காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு பட்டை நாமம் போட்டு தொடர் முழக்கப் போராட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்தை சிஐடியு சேலம் மாவட்ட தலைவர் டி.உதய குமார் துவக்கி வைத்தார். இதில், சங்கத்தின் மாநில செயலாளர் சு. செந்தில்நாதன், மாநிலத் துணைத் தலைவர் து.சிங்கராயன், எடப் பாடி செயலாளர் கலைவாணன் அந்தோணி, நாமக்கல் செயலாளர் எம். பழனிசாமி, மாவட்ட இணை செயலாளர் எம்.தங்கராசு உள் ளிட்ட சேலம், தருமபுரி, கிருஷ்ண கிரி, நாமக்கல், எடப்பாடி கோட் டத்தை சேர்ந்த நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர்கள் பங் கேற்றனர்.