districts

img

15 நிமிடம் அனைத்து வாகனங்களையும் நிறுத்த முடிவு

தருமபுரி, பிப்.19- மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.28 ஆம் தேதியன்று 15 நிமி டம் அனைத்து வாகனங்களையும் நிறுத்தும் போராட்டம் நடைபெற உள்ளதாக சிஐடியு அறிவித்துள்ளது. மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சிஐடியு சார்பில் நடைபெற உள்ள வாகன நிறுத்த போராட்டத்தை வெற்றி கரமாக நடத்துவது குறித்து ஆயித்த கூட் டம் தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் நடை பெற்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க மண்டல தலைவர் எஸ். சண்முகம் தலைமை வகித்தார். இதில், சிஐ டியு மாநில துணைத்தலைவர் எஸ்.தியாக ராஜன், மாநிலச் செயலாளர் சி.நாகராசன், மாவட்ட செயலாளர் பி.ஜீவா, அரசு போக்கு வரத்து கழக ஊழியர் சங்க மண்டல செயலா ளர் சி.முரளி, சாலை போக்குவரத்து தொழி லாளர் சங்க மாவட்ட தலைவர் பெருமாள், செயலாளர் ஆனஸ்ட்ராஜ், துணைத்தலை வர் பி.எம்.தருமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஒன்றிய அரசும், மாநில அரசும் அதீதமான தண்டனை, ஆன்லைன் அபராதம் போன்றவற்றை கைவிட வேண் டும்.

புதிய வாகனங்கள் வாங்க அரசு  மானியம் வழங்குவதுடன், தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் ஏற்பாடு செய்ய வேண்டும். தொழிலை முறைப் படுத்த ஆட்டோ, டாக்சி கட்டணத்தை நிர்ண யம் செய்ய வேண்டும். கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான, மக்களுக்கு எதிராக உள்ள மோட் டார் வாகன சட்டத்தை திருத்த வேண்டும்.  பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டணம் ஆகியவற்றை கட்டுப் படுத்தப்படுத்த வேண்டும். நலவாரியத்தை குளறுபடியின்றி செயல்படுத்தி வாரிய பலன் கள், ஓய்வூதியம் ஆகியவற்றை உயர்த்த வேண்டும். அரசே ஆன்லைன் ஆப் (செயலி) உரு வாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி பிப்.23 ஆம் தேதி முதல்  பிப்.26 ஆம் தேதி வரை தருமபுரி மாவட்டம் முழுவதும் பிரச்சார இயக்கம் நடத்துவது எனவும், பிப்.28 ஆம் தேதியன்று நண்பகல் 12 முதல் 12.15 மணி வரை அனைத்து வாக னங்களையும் 15 நிமிடம் நிறுத்த போராட் டத்தை வெற்றிகரமாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.