districts

img

உதகை நகராட்சியை, மாநகராட்சியாக உயர்த்த முடிவு இத்தலார் ஊராட்சியை இணைக்க 32 கிராம மக்கள் எதிர்ப்பு

உதகை, ஜூலை 10- உதகை நகராட்சியை, மாநகராட் சியாக தரம் உயர்த்தும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, 32 கிராம பொது மக்கள் புதனன்று கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். உதகை 1866 ஆம் ஆண்டு நக ராட்சியாக உருவானது. உதகை நக ராட்சியின் எல்லையை விரிவாக்கம் செய்து, மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்றும், இத னால் அதிக அளவில் அரசு திட்டங் கள் செயல்பாட்டுக்கு வரும்.  இதன் மூலம் உள்ளூர் பொதுமக்க ளின் வாழ்வாதாரம், பொருளாதாரம்  உயரும். எனவே, பல்வேறு தரப்பி னர் கோரிக்கைக்கு ஏற்ப உதகை நகராட்சியை, மாநகராட்சியாக தரம்  உயர்த்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன், 10  ஆம் தேதியன்று நகராட்சி அவசர  கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம்  நிறைவேற்றப்பட்டு மாநில அரசுக்கு  அனுப்பப்பட்டது.  உதகை நகராட்சியு டன் அருகில் உள்ள கேத்தி பேரூ ராட்சி மற்றும் இத்தலார், உல்லத்தி, நஞ்சநாடு, தொட்டபெட்டா ஆகிய  ஊராட்சிகளை இணைக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கு இத்தலார் உட் பட  அனைத்து  கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மேற்கண்ட கிராமங் களின் தலைவர்கள் மற்றும் நாக்கு பெட்டா படுகர்  நல அமைப்பு  சார்பில்  நடந்த முதல் கட்ட ஆலோசனைக் கூட் டத்தில், உதகை நகராட்சியை மாநக ராட்சியாக தரம் உயர்த்த கூடாது  என்று தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. தற்போது இத்தலார் சுற்றுவட் டாரத்தை சேர்ந்த, 32 கிராம பொது மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதனன்று, கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து, ஊர் தலைவர் ஆலன் கூறுகையில், உதகையை மாநகராட்சியாக தரம் உயர்த்தி இத் தலார் ஊராட்சியை அதனுடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றி யுள்ளனர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு  தெரிவித்துள்ளோம். இந்த கிராமங்க ளில் பூர்வகுடி, பழங்குடி, பட்டியலி னம் மற்றும் விவசாயிகள் உள்ள னர். இத்தலார் ஊராட்சியை  மாநக ராட்சியுடன் இணைத்தால் பல்வேறு  சலுகைகளை இழக்க வேண்டி நிலை  வரும் என்பதால் பொதுமக்கள் ஒன் றிணைந்து கையெழுத்து இயக்கம்  நடத்தி போராட்டம் நடத்தியுள்ளோம் என்றார்.