திருப்பூர், ஜன.13– திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற வுள்ள பின்னலாடை வேலை நிறுத்தத்துக்கு ஆதரவளிப்பது என திமுக தோழமை கட்சி கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தோழமை கட்சி களின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. தி.மு.க. மத் திய மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.செல்வராஜ் தலைமை யில் நடைபெற்ற இக்கூட்டத்தில் டி.கே.டி. மு.நாகராசன், தினேஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ரங்கராஜ், டி.ஜெய பால், காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர். கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.ரவி, மதிமுக நிர் வாகி நேமிநாதன், கொமதேக நிர்வாகி தம்பி வெங்கடாச்சலம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள் வருமாறு: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி, வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் பனியன் உற்பத்தி யாளர்களின் வேலை நிறுத்தப் போராட் டத்திற்கும்,
18ம் தேதி நிட்மா சங்கம் சார்பில் நடைபெற உள்ள ரயில் மறியல் போராட்டத் திற்கும் முழு ஆதரவு தருவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு கோரி உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் பிரச்சனையில் உடன் பாடு காண தமிழக அரசின் தொழிலாளர் துறை தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி யுள்ளது. பேச்சுவார்த்தையின் முடிவில் ஒத் துக்கொண்ட கூலி உயர்வை ஜவுளி உற் பத்தியாளர்கள் வழங்காததால் இந்த உற் பத்தி நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களும், பல ஆயிரக்கணக்கான விசைத்தறி தொழி லாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள னர். எனவே, இது குறித்து ஜவுளி உற்பத்தி யாளர்கள் சுமூக முடிவு காண வேண்டும் என்றும், விசைத்தறி தொழிலையும், தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாது காக்க தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜவுளித் தொழில் இயங்க மூல கார ணமாக இருப்பது பருத்தி மற்றும் பருத்தி நூல் ஆகும். ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கத்தின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கையால் யூக பேர வணிகத்தால் பஞ்சு சட்ட பூர்வமாக பதுக்கி வைக்கப்படுகிறது. அபரிமிதமான அளவுக்கு பஞ்சும், நூலும் அந்நிய நாடு களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய் யும் பஞ்சுக்கு ஒன்றிய அரசு 11 சதவிகித வரி விதிக்கிறது. ஆகவே, பக்கத்தில் உள்ள வங்கதேசம் உட்பட ஜவுளி ஏற்றுமதி செய் யும் நாடுகளுக்கு இணையாக நமது நாட்டிலி ருந்து ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி செய்ய இயலவில்லை. இதனால், திருப்பூர் பனி யன் தொழில் உட்பட ஒட்டுமொத்த ஜவுளித் தொழிலும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி யுள்ளது. ஜவுளித்தொழிலில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது. எனவே, இந்திய வேளாண்மைக்கு பாத கமாக போடப்பட்ட புதிய வேளாண் சட்டங் களை திரும்பப் பெற்றதைப் போல, பனி யன் உட்பட ஜவுளித் தொழிலுக்கு பாத கமாகவுள்ள கார்ப்பரேட்டுக்கும், யூகபேர வணிகர்களும் கொள்ளையடிக்க காரண மாகவுள்ள சட்டங்களையும் திட்டங்களை யும் ரத்து செய்ய வேண்டும். நூற்பாலை களுக்கு நியாயமான விலையில் பருத் தியை விற்பனை செய்ய வேண்டும். பனியன் உட்பட ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு சரி யான விலையில் நூல் கிடைத்திட வழி வகை செய்ய வேண்டும். சீனா, வியட்நாம் வங்கதேசம், இந்தோனேசியா, கம்போ டியா போன்ற நாடுகளைப்போல உலகச் சந்தையில் பனியன் உட்பட ஜவுளிப் பொருட் களை ஏற்றுமதி செய்ய அனைத்து வகை யிலும் உற்பத்தியாளர்களுக்கு உதவ வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.