ஈரோடு, ஜன.23- தொழிலாளர் விரோத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து பிப்.23,24 ஆம் தேதி களில் நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தை, ஈரோடு மாவட்டத் தில் வெற்றிகரமாக்க மாவட்ட ஆயத்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு நாட்டின் செல்வங்களான பொதுத் துறையை தனியாருக்கு அடிமாட்டு விலைக் குத் தாரை வார்ப்பதை கைவிட வேண்டும், தொழிலாளர் சட்டங்களை கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றி யிருப்பதை ரத்து செய்ய வேண்டும், சிறு, குறு தொழில்களை அழித்தொழிக்கும் மூலப் பொருட்கள் விலையேற்றம், ஜிஎஸ்டி வரி உயர்வை கைவிட வேண்டும், எரிபொருள் மீதான அநியாய வரி வசூலை கைவிட வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் பிப்ரவரி 23, 24 தேதிகளில் நடை பெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த பொதுமக்கள் மத்தியில் வேலை நிறுத்த பிரச்சாரத்தை கொண்டு சென்று ஆதரவு திரட்டவும், ஏஐடியுசி ஈரோடு மாவட்ட அலுவலகத்தில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு எச்எம்எஸ் மாவட்ட செயலா ளர் ஜீவா பி.சண்முகம் தலைமையில் நடை பெற்றது. இதில், சிஐடியு மாநில உதவித் தலைவர் ஆர்.சிங்காரவேலு, ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி, எல்பிஎப் மாவட்ட துணைச் செயலாளர் ஜி.ரவிச்சந்திரன், ஐஎன்டியுசி மாவட்ட கௌரவத் தலைவர் வி.ஜெகநாதன், எச்எம்எஸ் மாவட்ட தலைவர் டி.எம். குமாரசாமி, எம்எல்எப் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.காளியப்பன், எல்டியூசி மாநிலச் செயலாளர் ஏ.கோவிந்தராஜ், டிடிஎஸ்எப் மாநிலப் பொருளாளர் கே.குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆயத்த மாநாட்டில் பிப்ரவரி 23, 24இல் நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அனைத்துப் பகுதி மக்களின் ஆதரவைத் திரட்டுவது, ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று ஈரோடு மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங் களில் நாட்டைக் காப்போம், மக்களைக் காப்போம் என உறுதிமொழி ஏற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அந்த இரு நாட் களும் ஈரோடு மாவட்டத்தில் பெருந்திர ளான தொழிலாளர்கள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்கள் நடத் துவது என்று தீர்மானிக்கப்பட்டது. நிறை வாக, சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ர மணியன் நன்றி கூறினார்.