districts

img

கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

கோவை, ஜன.11- கோவையில் கொரோனா பரிசோதனைகளின் எண் ணிக்கையை அதிகரிக்க முடிவு  செய்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா  தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளு டன் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செவ்வாயன்று ஆலோசனை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து  அவர்   செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், கோவை மாவட் டத்தில் அரசு நிர்வாகத்தின் சார்பில் 7 ஆயிரத்து 368 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 4 ஆயிரத்து 691 படுக்கைகளும் என மொத்தம் 12 ஆயிரத்து 59  படுக்கைகள்  தயார் நிலையில் உள்ளது. இன்னும் தேவை  ஏற்பட்டால் அதனையும் செய்து தர அரசு நிர்வாகம் தயாராக உள்ளது. இதேபோல், இரண்டாவது தவணை தடுப்பூ சியும் நூறு சதவிகிதம் செலுத்தி கொண்ட மாவட்டம் என்ற நிலையை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. நாளொன்றுக்கு  9 ஆயிரம் பேருக்கு கொரோனா பரி சோதனை செய்து வரும் நிலையில், அதை 12 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது.  மேலும், கோவையில் உள்ள சோதனைச் சாவடிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காணிக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  வெளிமாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்கு வருபவர்களுடன், துணையாக வருபவர்களை யும் கண்காணிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சிகளில் தொற்றை கண்காணிக்க 152 பேர் சிறப்பு அலுவலர்களாக நிய மிக்கப்பட்டு, அவர்கள் வாட்ஸ் அப் குழு முலம் இணைக்கப் பட்டு, தொற்று அதிகரிக்கும் தனித்தனியான அடையாளம் காணப்பட்டு தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.   இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.  சனிக்கிழமைகளில் கூட்டம் கூடாமல் இருக்க மளிகை, காய்கறி கடை உரிமையாளர் களை அழைத்து அறிவுரை வழங்கப்படும். எந்தவித விருப்பு வெறுப்பும் பார்க்காமல் அரசின் வழிகாட்டு நெறிமுறைக ளுக்கு முழுமையான ஒத்திழைப்பு கொடுத்தால் தான் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும், என்றார். முன்னதாக, இந்த ஆய்வு கூட்டத்தின்போது கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் பல்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.