districts

img

மாற்றுத்திறனாளிகள் தின விழா

ஈரோடு, டிச.4- மாற்றுத்திறனாளிகள் தினத் தை முன்னிட்டு, பவானிசாகரில் அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும்  பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சார்பில்  கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானி சாகர் கமிட்டிக்குட்பட்ட புங்கார் காலனி, கொத்தமங்கலம், தொப் பம்பாளையம், உத்தண்டியூர் மற்றும் நல்லூர் ஆகிய கிளைகளில்  கொடியேற்றி, பெயர் பலகை  திறந்து, இனிப்புகள் வழங்கப் பட்டது. தலைவர் சுப்பிரமணி, செய லாளர் ஏ.பி.ராஜ் மற்றும் கிளை நிர் வாகிகள் மற்றும் மாற்றுத்திறனாளி கள் கலந்து கொண்டனர்.   பள்ளிபாளையம் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில்,  பள்ளிபாளையம் - ஆவரங்காடு பகுதியில் சங்க கொடி ஏற்றி இனிப்பு வழங்கும் நிகழ்வு நடை பெற்றது. இந்த நிகழ்விற்கு கிளை  தலைவர் எம்.சரவணன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் முருகேசன் வரவேற்புரை ஆற்றி னார். மாற்றுத்திறனாளிகள் சங்க  கொடியினை ஏற்றி எம்.ஆர். முருகேசன் மாவட்ட அமைப்பாளர்  சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் பொதுமக் களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் ஏ.அசன் உள் ளிட்ட ஏராளமான மாற்றுத் திற னாளிகள் பங்கேற்றனர். முடிவில்,  பள்ளிபாளையம் கிளை பொரு ளாளர் அருண்குமார் நன்றி கூறி னார்.