districts

img

திருப்பூர் அரசு பேருந்து பணிமனையில் இடிந்து விழும் கட்டிடங்கள் தொழிலாளர் உயிருக்கு ஆபத்து; அலட்சியம் காட்டும் நிர்வாகம்

திருப்பூர், அக். 21 - திருப்பூர் அரசுப் பேருந்து பணி மனையில் சிதிலமடைந்து இடிந்து  விழும் கட்டிடங்களில் தொழிலா ளர் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று சிஐடியு தொழிற் சங்கம் முறையிட்டும், அரசுப் போக் குவரத்து நிர்வாகம் அலட்சியம்  காட்டி வருகிறது. தொழிற்சாலை கள் தலைமை ஆய்வாளருக்கு  நேரில் புகார் தெரிவித்தும் அவர்க ளும் கண்டுகொள்ளவில்லை. கடந்த ஜூன் 3ஆம் தேதி திருப் பூர் கிளையில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்த காரணத்தால் சிஐ டியு சார்பில் திருப்பூர் மண்டல அலு வலகத்திற்கு உட்பட்ட அனைத்து  கிளைகளிலும் உள்ள கட்டிடங்க ளின் சுற்றுச்சுவர்களைப் பராமரிக்க  வேண்டும். பழுதான சுற்றுச் சுவர் களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என தொழிலாளர் துறைக்கும், நிர்வாகத்திற்கும் கடி தம் எழுதி இருக்கின்றனர். இந்த கடிதத்தின் அடிப்படை யில் சில வேலைகளை மண்டல நிர் வாகம் செய்துள்ளது. ஆனால் உட னடியாக பராமரிக்க வேண்டிய திருப்பூர் கிளை பணிமனையில் உள்ள கிணற்றில் உள்ள சுற்றுச் சுவரை கவனிக்காமல் மெத்தன மாக இருந்தனர். இதனால் கடந்த  வியாழக்கிழமை இரவு பெய்த கன மழையில் கிணற்றுச் சுற்றுச்சுவர் சரிந்து கிணற்றுக்குள் விழுந்து  விட்டது. கிணற்றின் மேற்பகுதி யில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் நல்வாய்ப் பாக சேதமின்றி தப்பின. சிஐடியு அனுப்பிய கடிதத்தின் மேல், தொழிலாளர் துறை தொழிற் சாலை ஆய்வாளர் உரிய முறை யில் ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தால், நேரில் ஆய்வாளர்கள் வந்து ஆய்வு செய்திருந்தால், இத்தகைய  பாதிப்பைத் தவிர்த்திருக்க முடியும்.  தொழிற்சாலை ஆய்வாளர்கள் அரசுப் பேருந்து பணிமனையின் எந்த தொழிற்சாலைகளையும் ஆய்வு செய்வதில்லை.  அரசு நிறுவனமான போக்கு வரத்து கழகத்தில் பணியாற்றுகிற தொழிலாளர்களுக்கு சுத்தமான,  சுகாதாரமான குடிநீர் வழங்குவ தில்லை. தொழிலாளர்கள் ஓய்வு எடுக்க உரிய ஓய்வறைகளும், காற் றோட்ட வசதி உள்ள சுகாதாரமான  ஏற்பாடுகளும் இல்லை. வளாகங்க ளில் உள்ள உணவகங்களும் சுகா தாரமற்றதாக உள்ளன. உணவ கங்களில் தேவையான இருக்கை களோ, மின் விசிறிகளோ இருப்ப தில்லை. தொழிலாளர்கள் படும் இன்னல் களை எழுத்துப்பூர்வமாக புகார் கடி தம் தயாரித்து, சென்னைக்குச் சென்று தொழிற்சாலைகள் கூடுதல்  தலைமை ஆய்வாளரிடம் நேரடி யாக மனுக் கொடுத்தும் கூட, இந்த அவல நிலையைப் போக்காமல், மெத்தனமாக இருக்கின்றனர். தொழிலாளர் நலனில் அக்கறை இல்லாதவர்களாக அரசுப் போக்கு வரத்து நிர்வாகமும், தொழிற் சாலை ஆய்வாளர் அலுவலக மும் இருப்பதை எண்ணி தொழி லாளர்கள் மனக்குமுறலுடன் உள் ளனர். தொழிலாளர் துறையோ கும்பகர்ன தூக்கத்தில் இருக்கிறது என்று தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.