உதகை, ஆக.31- ஊட்டியில் பெய்த கன மழையால் காய் கறி தோட்டத்தை வெள்ளத்தால் சேதம டைந்தது. தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ கம், புதுச்சேரி மாநிலங்களில் சில இடங் களில் ஒரு வாரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் கனமழை பெய்யக் கூடும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் வியாழனன்று கனமழை பெய்தது. முன்னதாக வியாழனன்று காலை முதல் வெப்பமாக இருந்த நிலையில், பிற்பகல் ஊட்டி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் விட்டு விட்டு கன மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் ஊட்டி பேருந்து நிலையத்தில் இருந்து படகு இல்லம் செல்லும் ரயில்வே பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன. மேலும் ஊட்டி மார்க்கெட் முழுவதும் தண்ணீர் ஆறாக ஓடியதால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனர். மழை பெய்ததால் ஓணம் விடுமுறைக்கு இங்கு வந்த சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். ஊட்டி சுற்று வட்டார பகுதியில் கடந்த இரண்டு நாட்கள் பெய்த கன மழை காரண மாக கேத்தி, பாலாடா பகுதியில் காய்கறி தோட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து நின்றது. இதில் கேரட், பீட்ரூட், கிழங்கு பயிரிட்ட தோட்டங்கள் சேதமாகியுள்ளது. இதற்கு இடையே கீர்த்தி பாலாடை பகுதியில் உள்ள ஓடையை முறையாக சீரமைக்காததாலும், தனியார் ஆக்கிரமிப்பில் இருப்பதாலும் மலை அதிகளவு பெய்யும் போது விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வருவகிறது. இந்த பிரச்சனையை தீர்க்க மாவட்ட நிர்வாகத் தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர். இதேபோல் குன்னூர் கொல்லிமலை பகுதியில் பெய்த மழை காரணமாக உரு ளைக்கிழங்கு பயிரிட்ட விவசாய நிலங் களில் தண்ணீர் தேங்கியது. இது குறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகை யில், 1 முதல் 3 நாட்கள் வரை தண்ணீர் தேங்கினால் நீலகிரி கால நிலைக்கு காய் கறி செடிகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற் படாது. அதற்கு மேல் வெயில் இல்லாமல் தண்ணீர் தேங்கினால் மட்டும்தான் பாதிப்பு ஏற்படும். இது குறித்து கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது என்றனர். இந்நிலையில், நீலகிரியில் வெள்ளி யன்று மதியத்திற்கு பின்னர் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத் துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலையாக 18 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 12 டிகிரி செல்சியஸ் பதிவாகும். காற்றில் ஈரப் பதத்தின் அளவு 81 சதவிகிதம் இருக்கும் என காலநிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.