நாமக்கல், ஜன.3- காவிரி பாலத்தின் பக்கவாட்டில் வளரும் மரங்களால் பாலத்தின் உறுதித்தன்மை பாதிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் காவிரி பாலத்தின் பக்கவாட்டில் வளரும் மரங்களால் பாலம் உறுதி தன்மை பாதிக்கப்பட்டு வருகிறது. இதில் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள பழைய காவேரி பாலம் ஆங்கிலே யர் காலத்தில் கட்டப்பட்டது. மிகவும் பழுதடைந்ததால், சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக, கன ரக வாகனங்கள் செல்ல அனு மதி மறுக்கப்பட்டது. இதில் பக்கவாட்டு சுவர்கள் பாதிக்கப் பட்டு, சில மாதங்கள் முன்பு பராமரிப்பு பனி செய்யப்பட் டது. தற்போது இந்த பாலத்தின் பக்கவாட்டில் அதிக அளவி லான அரச மரங்கள் வளர்ந்துள்ளது. நாளாக, நாளாக இந்த மரங்கள் பெரிதாகி வருகிறது. ஏற்கனவே பலவீனமாக இருக் கும் இந்த பாலத்தில் இந்த அரச மரத்தின் வேர்கள் ஊடுருவி மேலும் பாலத்தின் உறுதி தன்மையை பாதிக்க வைக்கி றது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த அரசமர செடி களை அகற்றி, பாலத்தின் உறுதித்தன்மையை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.