districts

img

கனமழை: தடுப்புச்சுவர் இடிந்ததில் வீடு சேதம்

உதகை, நவ.4- குன்னூரில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் சிக்கிய 10க்கும் மேற்பட்டோரை தீயணைப்புத் துறை யினர் பத்திரமாக மீட்டனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், பல் வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி  மாவட்டத்தில் குன்னூர், உதகை, கோத்தகிரி போன்ற பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், குன்னூர் நகராட்சி, 25 ஆவது வார்டுக் குட்பட்ட சின்னபள்ளிவால், ராஜாஜி நக ரிலுள்ள 23 ஆண்டுகள் பழைய கட்டி டம் மீது, சுமார் 50 அடி நீளம் கொண்ட  கருங்கல் தடுப்புச்சுவர் இடிந்து விழுந் தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குன்னூர் நகராட்சி துணைத்தலை வர் வாசிம் ராஜ், கவுன்சிலர் ஜாகிர் உசேன் ஆகியோர் ஆய்வு மேற் கொண்டு, தடுப்புச்சுவரை விரைவாக கட்டித் தருவதாக உறுதி அளித்தனர். இதனிடையே தடுப்புச்சுவருக்கு கீழ் பகுதியில் வசித்து வந்த பத்துக்கும் மேற்பட்டோர் வீட்டில் சிக்கிக்கொண்ட னர். இதையடுத்து தீயணைப்புத் துறை யினர் உடனடியாக அனைவரையும் பத் திரமாக மீட்டனர். இதேபோல் குன்னூர் - உலிக்கல்  சாலையில் நான்சச் பகுதியில் வியாழ னன்று இரவு மரம் விழுந்தது. இதனால்  அந்த வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இதுகுறித்த தகவலின்படி குன்னூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத் திற்கு சென்று மரத்தை வெட்டி அகற்றி னர். மேலும், அந்த பகுதியில் சாலை யோரம் ஆபத்தான வகையில் இருந்த ஒரு சில மரங்களையும் வெட்டி அகற்றி னர்.