உதகை, ஜன.22- நீலகிரி மாவட்டத்திலுள்ள அணைகளில் போதிய நீர் இல்லா ததால், 48 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கோடை காலம் துவங்க உள்ளதால், மின்வாரியம் திணறி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்காரா நீர்மின் திட்டத்தின் கீழ், குந்தா, கெத்தை, பரளி, பில்லூர், அவலாஞ்சி, காட்டு குப்பை, பைக் காரா, மசினகுடி உள்ளிட்ட 12 மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின் றன. இங்குள்ள, 13 அணைகள், 30க்கும் மேற்பட்ட தடுப்பணைக ளில் தேக்கி வைக்கப்படும் நீர் மூலம் 833.65 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட் டங்களுக்கு விநியோகிக்கப்படுகி றது. அணைகள் நிரம்பி வெளியே றும் உபரிநீர் சமவெளி பகுதிகளில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் பாசன விவசாயத்திற்கும் பயன்படுத்தப் பட்டு வருகிறது. கடந்தாண்டில் கோடை, தென்மேற்கு மற்றும் வடகி ழக்கு பருவமழை அவ்வப்போது பெய்ததால், மலை காய்கறி மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு ஏற்ற காலநிலை கிடைத்தது. மின் உற்பத் திக்கான அணைகளில் கடந்த ஜன வரி மாதம் 80 சதவிகிதம் அளவுக்கு அணைகளில் தண்ணீர் இருப்பு இருந்தது. இந்நிலையில், பருவமழை பொய்த்ததாலும், படிப்படியாக மின் உற்பத்திக்கு தண்ணீர் பயன்ப டுத்தியதாலும், அணைகளின் இருப்பில் இருந்த தண்ணீர் குறைந் துள்ளன. தற்போது பெரும்பாலான அணைகளில், 30 சதவிகிதம் அள வுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால், தினசரி மின் உற்பத்தி 200 முதல் 300 மெகாவாட் வரை தான் மேற்கொள்ள முடிகிறது. தண்ணீர் இருப்பு படிப்படியாக குறைந்ததை அடுத்து, கடந்தாண்டு மே மாதத் திலிருந்து சராசரியாக, 400 மெகா வாட் உற்பத்தியில் பாதிக்கப்பட் டுள்ளது. மே மாதம் முதல் டிசம்பர் வரை சராசரியாக 1.20 லட்சம் மெகா வாட்டாக இருக்க வேண்டிய மின் உற்பத்தி, 72 ஆயிரம் மெகாவாட் டாக குறைந்துள்ளது. அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால், 48 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கோடை காலம் துவங்க உள்ள நிலையில் மின்வாரியம் திணறி வருகிறது. இதுகுறித்து மின்வாரிய அதி காரிகள் கூறுகையில், கடந் தாண்டை பொறுத்தவரை, குறிப் பாக, தென்மேற்கு மற்றும் வடகி ழக்கு பருமழை பொய்த்ததால் அணைகளில் தண்ணீர் குறைந்தது எதிர்பார்த்த அளவு மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. மேலும், பாசனத்திற்கு தண் ணீர் திறக்கப்பட்டால், அணைக ளில் மேலும் தண்ணீர் குறைந்து மின் உற்பத்தி குறையும். இதனிடையே கோடை காலம் துவங்க உள்ள தால், உள்ளூர் தேவைக்குகூட மின் சாரம் உற்பத்தி செய்யவது கேள் விக்குறியாகியுள்ளது. இனி வரும் காலங்களில் கோடை மழை பெய் தால் தான், அணைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து, மின்சாரம் உற் பத்தி செய்ய முடியும், என்றனர்.